states

img

மாநில அரசு செலுத்தியது ரூ.5,580 கோடி ஆறு ஆண்டுகளில் மிகப்பெரிய முன்னேற்றம்

திருவனந்தபுரம், ஜுலை 28- கேரள அரசு பல நிலைகளில் சிரமங்களை கடந்து முன்னேறி வருகிறது. உள்கட்டமைப்பு மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றம் அதன் ஒரு பகுதியாகும். கடந்த 6 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனவும், நிலம் கையகப்படுத்த மாநில அரசு ரூ.5,580 கோடியை ஒன்றிய அரசிடம் வழங்கிய தாகவும் முதல்வர் பினராயி விஜயன் செய்தி யாளர் சந்திப்பில் தெரிவித்தார். பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு (என்எச் 966), கொச்சி, மூணாறு, தேனி (என் எச் 85), கொல்லம் மற்றும் செங்கோட்டா (என்எச் 744) ஆகிய தேசிய நெடுஞ்சாலைக ளை மேம்படுத்துவது அரசின் தொடர் தலை யீட்டின் விளைவாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பரிசீலனைக்கு வந்தது. தலை நகரின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் திரு வனந்தபுரம் வெளிவட்டச் சாலைத் திட்டம், மாநிலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது தேசிய சாலை மேம்பாட்டில் தீர்க்கமான சாதனையாக உள்ளது.

தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டிற்காக நிலம் கையகப்படுத்தும் போது, மற்ற மாநி லங்களுக்கு ஒன்றிய அரசு இழப்பீடு வழங்கு கிறது. கேரளாவில் நிலத்தின் விலை அதிகம் என்று கூறி ஒன்றிய அரசு அதிலிருந்து விலகி யது. அதன் மூலம், நிலச் செலவில் 25 சதவிகி தத்தை ஏற்று, அதை முன்தொகையாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு வழங்கி,  வளர்ச்சியை எல்.டி.எப் அரசு சாத்தியமாக்கி யது. தேசிய நெடுஞ்சாலை 66 மேம்பாட்டிற் காக 1081 எக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட  வேண்டும். இதில் 1065 எக்டேர் கையகப் படுத்தப்பட்டுள்ளது. இதன்படி 98.51 சதவிகித நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்துள்ளது. அக்டோபர் 13, 2020 அன்று, தேசிய நெடுஞ் சாலை 66 இன் ஒரு பகுதியாக ரூ.11,571 கோடி மதிப்பிலான ஆறு திட்டங்களை மத்திய அமைச் சர் நிதின் கட்காரி தொடங்கி வைத்தார். மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை மேம் பாட்டின் ஒரு பகுதியாக மொத்தம் ரூ.21,940 கோடி இழப்பீட்டுத் தொகுப்பு தயாரிக்கப் பட்டுள்ளது. ஜூலை 16, 2022 நிலவரப்படி ரூ.19,878 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள் ளது. 2011-16 ஆம் ஆண்டு யுடிஎப் அரசாங்கம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டில் தீவிர மெத்தனம் காட்டியது. அப்போது எதிர்க்கட்சி யாக இருந்த இடதுசாரி ஜனநாயக முன்னணி தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுக்கு அனை த்து ஆதரவையும் அளித்தாலும், அந்த அரசின் பங்களிப்பு முற்றிலும் சூன்யமானது.

2010 ஏப்ரல் 20இல் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில், தேசிய நெடுஞ்சாலையின் அக லத்தை 45லிருந்து 30 மீட்டராக குறைக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் இதை ஒன்றிய அரசு நிராகரித்தது. பின்னர் மீண்டும் 17-08-2010 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு தேசிய நெடுஞ்சாலையின் அகலம் 45 மீட்டராக மறுவரையறை செய்யப் பட்டது. அதன்பிறகு வந்த யுடிஎப் ஆட்சியில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற வில்லை. ரூ.20 கோடிக்கு மேல் செலவழித்தும், அப்போதைய அரசால் ஒரு அங்குலம் நிலத்தைக் கூட கையகப்படுத்த முடியவில்லை. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத் தலைவர் ஆர்.பி.சிங், 2013 மார்ச் 20 அன்று அப்போதைய முதலமைச்சருக்கு எழுதிய கடி தத்தில், கேரளாவில் தேசிய நெடுஞ்சாலை கள் மேம்பாடு தொடர்பான அனைத்துப் பணி களையும் கைவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகத் தெரிவித்தார். அரசு முறை யாகத் தலையிடாததால், இந்தக் காலகட்டத் தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் முழு கவனத்தையும் வளத்தையும் இழந்து விட்டோம்; அண்டை மாநிலங்களில் குவியும் நிலை ஏற்பட்டது. உரிய காலத்தில் நிலம் கையகப்படுத்தப்படாவிட்டால், கேரளாவில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு நிறுத்தப் படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பலமுறை தெரிவித்தது. ஆனால் எதுவும் நடக்காததால் தேசிய நெடுஞ்சாலை ஆணை யம் அலுவலகத்தை மூடிவிட்டு கேரளாவை விட்டு வெளியேறியது.

ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், 2014 ஜூலை 4 இல் அப்போதைய முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், குறைந்தபட்சம் 80 சத விகிதம் நிலம் இருந்தால் மட்டுமே தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மீண்டும் திட்டத்தை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நிலம் கைய கப்படுத்தும் பணியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சில சுயநல சக்திகளுக்காக யூடிஎப் அரசாங்கம் பணிந்தது. 2016இல் ஆட்சிக்கு வந்ததும், மக்களின் நம்பிக்கையை பெற்று, தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டை குறித்த நேரத்தில் முடிப்பதாக, இடதுசாரி ஜனநாயக முன்னணி வாக்குறுதி அளித்தது. மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்காக நிலத்தை விட்டுக்கொடுக்க வேண்டியவர் கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட வேண்டிய தில்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது. நிலத்தை இழந்தவர்களுக்கு அரசு துணை நிற்கும் என்றும், இழப்பீடு மற்றும் மறு வாழ்வு உறுதி என்றும் மக்களை நம்பவைக்க முடிந்தது. எல்டிஎப் அரசாங்கம் 2016 மே 25 அன்று பதவியேற்றது. பதவியேற்ற இருபது நாட்களுக்குள்,

ஜூன் 15இல், இத்திட்டத்தை மதிப்பிடுவதற்கான உயர்நிலைக் கூட்டம் நடந்தது. குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர், முதல மைச்சராக நேரடியாகவும், பொதுப்பணித் துறை அமைச்சர் தலைமையிலும், மற்ற அமைச்சர்கள் பங்கேற்புடனும் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதன்மூலம், மாநிலத்தின் ஒவ்வொரு துறையின் பிரச்சனைகளையும் விரிவாக ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளைக் காண, தொடர்புடைய அனைத்து துறைகளுடன் ஒத்து ழைத்து, முறையான தலையீடு இருந்தது. நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான முன் னேற்ற அறிக்கையை ஒவ்வொரு மாதமும் சமர்ப்பிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர்  நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் கள் ஒவ்வொரு மாதமும் பணி முன்னேற்ற அறிக்கையை வருவாய்த் துறை கூடுதல் தலை மைச் செயலாளர் மற்றும் நோடல் அலுவலர் மூலம் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்க வேண் டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. சீரமைப் பில் திருத்தம் செய்ய முன்மொழியப்பட்ட இடங்களில் கணக்கெடுப்பு நடத்தி, கூட்டாக ஆய்வு நடத்தி எது பொருத்தமானது என்பதை முடிவு செய்ய ஒப்புக் கொள்ளப்பட்டது. நில உரிமையாளர்களுக்கு என்னென்ன இழப்பீடு வழங்கப்படும் என்பது குறித்து கணக்கெடு ப்பு தளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. கருவூலத்திற்கு கூடுதல் சுமை ஏற்படா மல் அதிகபட்ச இழப்பை குறைத்து சீர மைப்பை முடிவு செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

நிலம் கையகப்படுத்துவதை நிறுத்த பல தரப்பிலிருந்தும் பல தடைகள் வந்தன. வேலை நிறுத்தங்கள் திட்டமிடப்பட்டன. காங்கிரஸும் பா.ஜ.கவும் வெளிப்படையாகவே வானவில் முன்னணிகளை ஏற்படுத்தின. இழப்பீடு  கிடைக்காது என தவறாக வழி நடத்த முயன்ற னர். பொய்யான செய்திகள் பரவலாக பரப்பப்பட்டன. நந்தி கிராமத்தின் மண்ணைக் கொண்டு வந்தவர் ஒன்றிய அமைச்சர். கேரளாவில் நிலம் கையகப்படுத்துவதை நிறுத்தக் கோரி அப்போதைய பாஜக மாநி லத் தலைவர் ஒன்றிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார். நிலம் கைய கப்படுத்தும் பணி வேகமாக நடந்து கொண்டி ருந்த நேரத்தில் இந்த தலையீடு வந்தது. அப் போது, கட்டுமான பணியை தாமதப்படுத் தும் ஒன்றிய அரசின் உத்தரவு வந்தது. அப் போது கண்ணூர், கோழிக்கோடு போன்ற மாவட்டங்களில் 80 சதவிகிதமும் தென் மாவட் டங்களில் 50 சதவிகிதமும் நிலம் கையகப் படுத்தும் பணி முடிக்கப்பட்டிருந்தது. அந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுக்கான முதல் முன்னுரிமை பட்டிய லில் இருந்து காசர்கோடு தவிர பிற மாவட் டங்களை நீக்கி, இரண்டாவது பட்டியலுக்கு ஒன்றிய அரசு மாற்றியது. இந்த மாவட்டங் களில் நிலம் கையகப்படுத்துவதை நிறுத்த  வேண்டும் என்று ஒன்றிய அரசின் உத்தரவு வந்தது. ஒவ்வொரு கட்டத்திலும், கேரளா வின் தேசிய நெடுஞ்சாலைகளின் வளர்ச்சியை சீர்குலைக்க கேரள பா.ஜ.க. அனைத்து நிலையிலும் முயன்றது. பின்னர் 2019 ஜூனில் எதிர்ப்புகள் மற்றும் விவாதங்களின் விளைவாக, கேரளாவின் தேசிய நெடுஞ் சாலைகளின் மேம்பாட்டை மீண்டும் முதலா வது பரிசீலனை பட்டியலில் சேர்க்க ஒன்றிய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் அதிகா ரப்பூர்வமாக முடிவு செய்தது. தில்லியில்  ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரியுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அப்போதும் கூட, செலவில் ஒரு பங்கை மாநிலம் ஏற்க வேண்டும் என்று ஒன்றிய அரசு கூறியது. முதல்கட்டமாக நிலம் கையகப் படுத்தும் செலவில் 50 சதவிகிதத்தை கேரளா  ஏற்க வேண்டும் என்பது ஒன்றிய அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நிலைப் பாடாக இருந்தது. பின்னர் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு நாட்டிலேயே எங்கும் இல்லாத அளவுக்கு நிலம் கையகப் படுத்துவதில் 25 சதவிகிதத்தை அரசு செலுத்த வேண்டியிருந்தது. இது தேசிய நெடுஞ் சாலை வளர்ச்சியை தாமதப்படுத்திய யுடிஎப்  மற்றும் தடுக்க முயன்ற பாஜகவால் நம் தலை யில் சுமத்தப்பட்ட கூடுதல் சுமையாகும்.

நிலம் கையகப்படுத்த மாநில அரசு இது வரை ரூ.5580 கோடி செலவிட்டுள்ளது. இவ்வ ளவு தொகையை மாநில அரசு செலவழிக்கா மல் இருந்திருந்தால், கேரளாவின் தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சிக்கு முடிவே இல்லா மல் இருந்திருக்கும். நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான மக்களின் கவலைகளை எல்.டி.எப் அரசு போக்க வேண்டும். சிறந்தமுறை யில் மறுவாழ்வு தொகுப்பை அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. அதிகபட்ச இழப்பீடு கொடுத்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. 125 கி.மீ., தேசிய நெடுஞ்சாலை ஓராண்டுக் குள் முடிக்கப்பட்டு போக்குவரத்துக்கு ஏற்ற தாக மாற்றப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. கழக்கூட்டம் மேம்பாலம் அக்டோபரில் திறக் கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மாஹி-தலச்சேரி புறவழிச்சாலை மற்றும் மூராடு பாலம் ஆகியவை வரும் மார்ச் மாதம்  நிறைவடையும். நீலேஸ்வரம் ரயில்வே மேம் பாலம் திறக்கும் நாள் விரைவில் அறிவிக்கப் படும் என்றும் ஆணையம் நம்பிக்கை தெரி வித்துள்ளது. போக்குவரத்து பிரச்சனையை தீர்ப்பது மாநிலத்தின் பெரும் சொத்தாக மக்களுக்கு பயனளிக்கும் என்பது உண்மையாகி வரு கின்றது. இதற்கு ஒத்துழைத்த மக்களின் வெற்றியே இது என்றும் முதல்வர் கூறினார்.