நிலச்சரிவில் அனைத்தையும் இழந்தவர்களுக்கு விரை வில் மறுவாழ்வு அளிக்க ஒன் றிய அரசு நிதியுதவி அளிக்க வேண் டும் என்றும் கேரள காலநிலை மாற் றத்துக்கு உகந்த பணிகளுக்கு நிதி உதவி மற்றும் தொழில்நுட்ப உதவி தேவை என்றும் பிரதமர் நரேந்திர மோடியிடம் கேரள முதல்வர் பின ராயி விஜயன் கேட்டுக் கொண்டார்.
ஆக.10 சனியன்று பேரிடர் பகுதியை பிரதமர் பார்வையிட்ட போது இந்தக் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. பேரிடரின் அளவை பிரதமர் முன்னிலையில் விளக்கிய முதல்வர், கோரிக்கை கள் அடங்கிய மனுவை சமர்ப்பித் தார். முண்டக்கை நிலச்சரிவு பேரி டரின் அளவு மற்றும் தாக்கத்தை கருத்திற்கொண்டு அதிதீவிர பாதிப்பாகவும் தேசிய பேரிடராக வும் அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
பல்லாயிரம் கோடி இழப்பு ஏற் பட்டுள்ளதாக முதற்கட்ட மதிப்பீடு கள் தெரிவிக்கின்றன. புவி வெப்ப மடைதல் மற்றும் காலநிலை மாற் றத்தின் தாக்கம் பெருமளவிலான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது அடிக்கடி ஏற்படும் எதிர்பாராத இயற்கை பேரழிவுகளில் பிரதி பலிக்கிறது. கடந்த கோடை காலத் தில் முதன்முதலாக வெப்ப அலை பதிவாகியுள்ளது. பருவநிலை மாற் றமும் தீவிர மழைக்கு பங்களித் துள்ளது. இத்தகைய இயற்கைப் பேரிடர்களைச் சமாளிப்பதற்கு போதுமான தயார்நிலை தேவை.
இந்திய புவியியல் ஆய்வு, மத் திய வானிலை ஆய்வு மையம், நில நடுக்கத்திற்கான தேசிய மையம் மற்றும் கடல் தகவல் சேவைகளுக் கான இந்திய தேசிய மையம் போன்ற ஆராய்ச்சி நிறுவனங்க ளின் அதிநவீன ஆய்வு வசதிகளு டன் கூடிய சிறப்பு மையங்கள் மற் றும் பிராந்திய அலுவலகங்கள் கேர ளாவில் அமைக்கப்பட வேண்டும். வானிலை கண்காணிப்புக்கு நவீன அமைப்பு தேவை. அதற்கு, நவீன பேரிடர் ஆய்வு அமைப்புகள், நில பயன்பாட்டு திட்டமிடல் வரைபடங் கள் மற்றும் லிடார் அடிப்படையி லான டிஜிட்டல் மாதிரிகள் ஆகிய வற்றைப் பயன்படுத்த வேண்டும்.
2015ம் ஆண்டு கோட்டயத்தில் மாநில அரசால் தொடங்கப்பட்ட பருவநிலை மாற்ற ஆய்வு மையத் தின் செயல்திறனை அதிகரிக்க ஒன்றிய அரசு உதவ வேண்டும். கேரள காலநிலை மாற்றத்துக்கு உகந்த பணிக்கு (அடாப்டேசன் மிஷன்) நிதி உதவி மற்றும் தொழில் நுட்ப உதவி தேவை. வயநாடு பேரிடரின் அளவைக் கருத்தில் கொண்டு ஒன் றிய அரசுத் துறைகள் மாநில அரசு டன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டார்.
மறுவாழ்வு, கல்வி, வேலை வாய்ப்புக்கு உதவ கேரளத்திற்கு சிறப்புத் தொகுப்பு தேவை
ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் வலியுறுத்தல்
மறுவாழ்வு, குழந்தைகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப் பிற்கு சிறப்பு தொகுப்புக்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளத்தின் கோரிக்கையை முதல் வர் பினராயி விஜயன் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
முண்டக்கையில் பேரிடர் பகுதி களை பார்வையிட்ட பின்னர் கல் பற்றாவில் உள்ள வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பிரத மர் பேசினார். அப்போது அவர், பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களு டன் நாடே உள்ளது என்றும், ஒன் றிய அரசு முடிந்த அனைத்தையும் செய்யும் என்றும் கூறினார்.
மறுவாழ்வு என்பது நாட்டின் பொறுப்பு. பணம் ஒரு தடையல்ல. பேரிடர்களால் பாதிக்கப்படு வோரை பாதுகாப்பது நாட்டின் பொறுப்பு என்றும், கோரிக்கைகள் உள்ளிட்ட தேவைகளை கேரளம் அளிக்க வேண்டும் என்றார். அதே நேரத்தில், வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் பிரதமர் மவுனம் காத்தது ஏமாற் றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிலச்சரிவின் தாக்கம் மற்றும் அளவைக் கருத்தில் கொண்டு, நிலச்சரிவை தேசிய பேரிடராகவும், அதிதீவிர பேரிடராகவும் அறி வித்து, அதற்கேற்ப உதவிகளை வழங்குமாறு கோரப்பட்டது. மனு வும் கொடுக்கப்பட்டது.
நம்பிக்கையில் கேரளம்
பிரதமரின் வருகை தமக்கு பூரண திருப்தி அளிப்பதாகவும், கேரளத்துக்கு உரிய உதவி கள் கிடைக்கும் என நம்புவதாக வும் அமைச்சரவை உபகுழு உறுப் பினர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
பேரழிவின் பரிமாணத்தை பிர தமர் நேரில் உணர்ந்தார். 1979 ஆம் ஆண்டு மோர்பி அணைப் பேரழிவில் தன்னார்வத் தொண்ட ராக இருந்த அனுபவத்தை நினைவு கூர்ந்து பிரதமர் பேசி னார். இதிலிருந்து வயநாடு பேர ழிவை அவர் தீவிரமாக எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது புரி கிறது. அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிரதமர் உறுதி அளித்துள்ளார். கேரளத்தின் மனு வும் கொடுக்கப்பட்டுள்ளது. எஞ்சி யிருப்பது சில தொழில்நுட்ப நடை முறைகள் மட்டுமே. அதுவும் நிறை வேற்றப்படும் என்று அமைச்சர் கே.ராஜன் கூறினார். அமைச்சர் கள் ஏ.கே.சசீந்திரன், பி.ஏ.முக மது ரியாஸ், ஓ.ஆர்.கேளு ஆகியோ ரும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.