பாலக்காடு, ஜுலை 25- கேரளத்தில் பரவலாக மழை அதி கரித்துள்ள நிலையில் சலவர பாலாற்றுப்படி யில் ஏற்பட்ட திடீர் சூறாவளி காற்று காரண மாக பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் 14 வீடுகள் பகுதியளவில் இடிந்தன.பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. மரம் விழுந்து சில வாகனங்கள் சேதம் அடைந்தன. திங்களன்று (ஜுலை 24) மாலை திடீர் சூறாவளி காற்று தாக்கியது. வீதியோரம் அமர்ந்திருந்த நபர் அருகில் இருந்த ஓடையில் தவறி விழுந்துள்ளார். காற்றின் தாக்கத்தால் இருசக்கர வாகனத்தில் சென்ற வர் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளா னார். உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.