கொல்லம், டிச.18- ஒன்றிய- கேரள அரசுகளுக் கிடையே மோதலை உருவாக்கும் ஆளுநர் தொடர்பான பிரச்சனைகளை ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். ஆளு நருக்கு வேறு நோக்கங்கள் உள்ளன. அதற்காக அவரே பிரச்சாரம் செய்து வருகிறார் எனவும் முதல்வர் குறிப்பிட்டார். புதிய கேரள அரங்கத்தின் ஒரு பகுதியாக திங்களன்று கொட்டாரக் கரையில் நடந்த செய்தியாளர் சந்தி ப்பில் முதல்வர் மேலும் கூறியதாவது: ஆளுநர் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளை எடுத்து வரு கிறார். எவரேனும் ஆளுநர் மீது பாய்ந் தார்களா? எதிர்ப்பு காட்டப்பட்டால், அந்த போராட்டத்தை நோக்கி தாவிச் செல்லும் ஆளுநர் நாட்டில் எங்காவது இருக்கிறாரா? அதிகாரப்பூர்வ பத வியில் இருப்பவர் போராட்டக் காரர்களை நோக்கி விரைந்து செல் வது நம் நாட்டின் வரலாற்றில் முன்னெ ப்போதும் இல்லாதது.
அதைத்தான் அவர் இங்கு செய்தார். மாணவர்களை நோக்கி கூச்சலிடு கிறார். குற்றவாளிகள், இரத்தம் தோய்ந்தவர்கள், அயோக்கியர்கள் போன்ற கடுமையான வார்த்தை களைக் கூறி கத்துகிறார். உயர் பத வியில் இருப்பவர் இப்படித்தான் செய்ய வேண்டுமா? அதை சாதா ரணமாக அணுக அதற்கான வழிகள் உள்ளன. அந்த வழிகளை ஏற்றுக்கொள் ளுங்கள். ஒழுங்காக நடக்கிறதா என்று பார்க்க சட்ட அமலாக்க அதி காரிகள் இருக்கிறார்கள். ஆனால் எதையும் கூச்சலிட்டு எதிர்கொள்ளும் மனநிலைக்கு அவர் வந்துவிட்டார். ஆளுநர் தனிப்பட்ட முறையில் மட்டுமல்ல, ஒரு நாட்டையே இழிவு படுத்துகிறார். ‘ப்ளடி கண்ணூர்’ என்று அழைக்கிறார். ஒன்றிய அரசின் சில செய்தி தொடர்பாளர்களும் ஆளு நருக்கு ஆதரவாக களமிறங்குகின்ற னர். அவர்களுடன் கலந்தாலோசித்த பிறகே இதுபோன்ற விசயங்கள் முடிவு செய்யப்படுகின்றன என்பது இதி லிருந்து தெளிவாகிறது. ஒன்றிய-மாநில உறவுகளை சீர்குலைப்பதே நோக்கம் என்றால், இதுபோன்ற விசயங்களை சரி செய்ய தலையிட வேண்டும். மிகவும் ஆத்திரமூட்டும் சூழலை உருவாக்க ஆளுநர் முயற்சிக்கிறார். கேரளம் மிகவும் அமைதியான மாநிலம். இங்கு ஒரு மோசமான சூழ லை உருவாக்க நினைக்கிறார் போலி ருக்கிறது. அவருக்கு வேறு நோக்கங் கள் உள்ளன. அதற்காக அவரே பிரச்சாரம் செய்கிறார். பிரச்சனை களை ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நேரம் இது. அதற்கான நடவடிக்கை எடுக்கப் படும். மாநிலத்தில் அதற்கான விசயங் கள் உள்ளன என்றும் முதல்வர் கூறினார்.