states

img

வறுமை இல்லாத கேரளமே எங்கள் இலக்கு

திருவனந்தபுரம், ஆக.28 -  வறுமை இல்லாத கேரளமே மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யிலான இடது ஜனநாயக முன்னணி அர சின் இலக்கு என்று ஓணத் திருவிழாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் கூறினார்.  கேரள மக்களின் பெரும் உற்சாக மிக்க ஓணத் திருவிழா இன்று (ஆகஸ்ட் 29) கோலாகலத்துடன் கொண்டாடப் படுகிறது. இதையொட்டி தலைநகர் திரு வனந்தபுரமும் ஒட்டுமொத்த கேரளமும் வண்ண விளக்குகளாலும் அத்தப்பூ கோலங்களாலும் ஜொலிக்கிறது.  ஓணத் திருவிழாவின் மாநில அளவி லான வார விழாவை கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற உற்சாகமிக்க விழாவில் துவக்கி வைத்தார்.  அப்போது பேசிய அவர், “இன் னல்களை எதிர்கொள்பவர்களுக்கும் ஓணம் பண்டிகையை கொண்டாட அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், புராணத்தில் கூறப்பட்டதை விட உன்னத நிலையை நோக்கிய பய ணம் தற்போது நடைபெற்று வருவதாக வும் தெரிவித்தார். மேலும் அவர் பேசி யதாவது,  “சில வாரங்களுக்கு முன்பு வரை ஓணம் பண்டிகைக்கு மக்கள் மகிழ்ச்சி யாக இருக்க முடியாது என்று சிலர்  பிரச்சாரம் செய்து வந்தனர். இத்தகைய பிரச்சாரங்கள் பொய்யானவை.  பிரச்சாரத்தை நம்பியவர்களுக்குக் கூட, இப்போது விசயம் புரிந்தது. கேரளத்தின் தெருக்களிலும் நக ரங்களிலும் மக்கள் ஓணத்தைக் கொண் டாடி வருகின்றனர். எல்லா இடங்களி லும் மக்கள் திருப்தியுடனும் மகிழ்ச்சி யுடனும் ஓணம் கொண்டாட்டத்திற்கு தயாராகிவிட்டனர். இந்த ஓணத்தில் கிடைக்காது என்று சிலர் பிரச்சாரம் செய்து வந்த அனைத்து பொருட்களை யும் அரசு கிடைக்கச் செய்துள்ளது. ஓண த்தின் போது பணப்பலன்களை வழங்க கருவூலத்தில் இருந்து 18,000 கோடி  ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மனிதர் கள் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்பதே ஓணத்தின் புராணக் கதை. ஆனால் உலகமும் நாடும் அப்படி இல்லை. பணக்காரர்களுக்கும் ஏழை களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறது.

உலகிலேயே ஏழ்மையான நாடாக இந்தியா மாறி விட்டது. மக்கள் நலனை உறுதி செய்வதே நிர்வாகத்தின் முதன்மையான கடமை. கேரளத்தில் அனைவரும் சமமாக நடத்தப்படுகிறார்கள். பொதுக் கல்வித் துறை மிகவும் மேம்பட்டுள்ளது. பணம் இருந்தால்தான் சிகிச்சை என்கிற நிலை மாறிவிட்டது. சொந்த வீட்டுக்கு கனவு காணும் மக்கள் உள்ளனர். லைஃப் திட்ட த்தின் மூலம் 4 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டதால், 16 லட்சம் பேர் சொந்த வீடுகளில் உறங்குகின்ற னர். மிகவும் ஏழைகளை வறுமையில் இருந்து விடுவிக்க அரசு முயற்சி செய்து வருகிறது.  ஒவ்வொரு குடும்பத்தையும் அடிப்படையாகக் கொண்டு மைக்ரோ திட்டத்தை தயாரித்து தீவிர வறுமை இல்லாத கேரளாவை அரசு இலக்கா கக் கொண்டுள்ளது. கேரளாவின் ஒற்று மைக்கு காரணம் நமது மதச்சார்பற்ற பண்பாடு. அதனைத் தக்க வைத்துக் கொள்ள அனைவரும் விழிப்புடன் இரு க்க வேண்டும். இவ்வாறு பினராயி விஜயன் கூறினார். இவ்விழாவில் திரைக்கலைஞர் ஃபஹத் பாசில் மற்றும் உலகப் புகழ் பெற்ற நடனக் கலைஞர் மல்லிகா சாரா பாய் ஆகியோர் சிறப்பு விருந்தினர் களாக கலந்து கொண்டனர்.  இந்நிகழ்ச்சியில் மாநிலப் பள்ளிக் கலை  விழாவில் முதலிடம் பெற்ற பட்டாம்பி பெரிங்கோடு பள்ளி மாணவர்களின் பஞ்சவாத்தியம், கலாமண்டலம் நாட்டியக் கலைஞர்களின் நடனச் சிற்பம் ஆகியவையும் இடம்பெற்றன. பிஜுநாராயணன் - ரிமி டாமி  குழுவின ரின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.