திருவனந்தபுரம், ஜுன் 6- கேரளாவில் 5ஜி இணைய சேவை யை வழங்கும் நெட்வொர்க்கின் முது கெலும்பாக இருக்கும் கே ஃபோனுடன் பிஎஸ்என்எல் கரம் கோர்க்க உள்ளது. கே ஃபோனின் 5ஜி சேவைக்கு பிஎஸ்என்எல் ஸ்பெக்ட்ரம் மற்றும் டவர்கள் பயன்படுத்தப்படும். இதற்கான திட்டத்தை பிஎஸ்என்எல், கே ஃபோனிடம் ஒப்படைத்துள்ளது. அரசு மட்டத்தில் முடிவெடுத்த பின், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப் படும். டெக்னோபார்க், கேரளா ஸ்டார்ட்அப் மிஷன் மற்றும் இன்ஃ போபார்க் போன்ற பகுதிகளுக்கு 5ஜி அதிவேக இணையம் முன்னுரிமை திட்டமாக கருதப்படுகிறது. பிஎஸ்என்எல்-இன் தற்போதைய டவர்களை 5ஜி சேவைகளை வழங்க மேம்படுத்தலாம். டிராய் பரிந்துரைத்த படி உயர்-அலைநீள 5ஜி இணைய சேவையை உறுதி செய்ய, ஒவ்வொரு நூறு மீட்டருக்கும் தூண்கள் மற்றும் தளவாடங்கள் நிறுவ ஆப்டிக் ஃபைபர் தேவைப்படுகிறது. கே ஃபோன் மாநிலம் முழுவதும் இதன் பெரிய தொகுப்பை தயார் செய்துள்ளது. பழங்குடியின கிராமங்களில் கூட தொலைதூர பகுதிகளில் 5ஜி சேவையை உறுதி செய்யக்கூடிய நெட்வொர்க் இது. கே ஃபோனில் 48 ஆப்டிக் ஃபைபர் உள்ளது. இவற்றில் 20 நிறுவனத்தால் பயன் படுத்தப்படும். மீதமுள்ள 28 டார்க் ஃபைபர்களை மற்ற இணைய சேவை வழங்குநர்களுக்கு குத்தகைக்கு விட கே ஃபோன் தயாராக உள்ளது. இந்த வாய்ப்பை பிஎஸ்என்எல் நிறுவனமும் பயன்படுத்திக் கொள்கிறது.