states

img

‘மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்பதால் அமலாக்கத்துறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது பாஜக’

கண்ணூர், அக். 8- மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வர முடியாது என்பதை உணர்ந்ததால் பாஜக அரசு அமலாக்கத்துறையை கட்ட விழ்த்து விட்டுள்ளது என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். அண்மையில், எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ள நான்கு மாநிலங்களில் ஒரே நேரத்தில் அமலாக்கத்துறையால் (ஈடி) ரெய்டுகள் நடத்தப்பட்டன. புதிய  சூழ்நிலையில் பா.ஜ.க எப்படி நடந்து கொள்ளும் என்பதற்கு இதுவே அறிகுறி என்றும் பினராயி கூறினார். கண்ணூர் மாவட்டம் தர்மடம் தொகு தியில் நடைபெற்ற இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எப்) குடும்பக் கூட்டங் களில் அவர் பேசினார். அப்போது அவர், “பாஜக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவது ஈடுசெய்ய முடியாத ஆபத்து என்பதை நாட்டு மக்கள் பொது வாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த ஆபத்து தவிர்க்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கருத்து. அதனால் தான் மதச்சார்பின்மையை விரும்பு பவர்களின் சங்கமம் நடந்துள்ளது. பா.ஜ.க வின் கைகளில் ஆட்சி சிக்காமல்  இருக்க முயற்சி எடுக்க வேண்டும். கூட்டு  முயற்சியை வலுப்படுத்துவது தொடர்பாக நாடு முழுவதும் விவா தங்கள் நடந்து வருகின்றன. மற்றொரு பதவிக்காலம் சாத்தியமற்றது என்பதை பாஜகவும் உணர்ந்துள்ளது. அது அவர் களை மிகவும் ஆபத்தான நகர்வு களுக்கு தள்ளும். அண்மைய நாட்களில் இடம்பெற்ற ரெய்டு உள்ளிட்ட சம்பவங்களும் அத னையே சுட்டிக்காட்டுகின்றன. மேலும் இதுபோன்ற நகர்வுகளை எதிர்பார்க்க லாம். அதே சமயம், தேர்தலில் பாஜக அல்லாத எந்த வேட்பாளர் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இது கும்பல் மனப்பான்மையாக இருக்கக் கூடாது. மதச்சார்பின்மைக்காக அவர்கள் உறுதியாக நிற்க வேண்டும், வகுப்புவாதத்தை எதிர்க்க வேண்டும். இந்த விஷயத்தில் காங்கிரஸ் உறுதி யான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்” என்று முதல்வர் கூறினார்.