states

img

சபரிமலையில் நெரிசலை ஏற்படுத்தி மோதலுக்கான பாஜகவின் முயற்சி அம்பலம்

திருவனந்தபுரம், டிச.17- சபரிமலை சன்னிதானத்தில் செயற்கை யாக நெரிசலை உருவாக்கி மோதலை உரு வாக்க சங்பரிவார் முயற்சி மேற்கொண்டது அம்பலமாகி உள்ளது. பாஜகவின் தலைமையின் கீழ், மாநி லத்தின் பல்வேறு மையங்களில் இருந்து மக்களை அழைத்து வந்து, வேண்டு மென்றே முகாமிட்டு, மோதலின் கோபத்தை  அதிகரிக்கிறது. ஆட்டிங்கல், திருவனந்த புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பாஜக நிர்வாகிகள் தலைமையிலான குழுவினர் சபரிமலைக்கு வந்துள்ளனர். மாநில அரசுக்கு எதிராக அவர்கள் சபரி மலை சென்றடைந்தது குறித்து, சமூக வலை தளங்களில் ஆட்டிங்கல் தொகுதி நிர்வாகி அஜித் பிரசாத் மற்றும் ஆட்டிங்கல் தொகுதி தலைவர் சந்தோஷ் தலைமையிலான குழுவினரின் படங்கள் பகிரப்பட்டன. நாடா ளுமன்ற தேர்தலில் கேரளத்தில் தாமரை மலர பம்பைக்கு வந்ததாக முகநூலில் பகிரப்பட்ட பதிவு விவாதத்தை ஏற்படுத்தி யதை தொடர்ந்து வாபஸ் பெறப்பட்டது. சபரிமலையில் காணிக்கை அளிக்கக் கூடாது என பாஜகவினர் பிரச்சாரம் செய்து  வருகின்றனர். சன்னிதானத்தில் சிலர் வேண்டுமென்றே முகாமிட்டு செயற்கையாக நெரிசலை ஏற்படுத்துவதாகவும், இதற்கு மறைமுக திட்டம் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் முன்னாள் மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார்.