கோழிக்கோடு, ஆக.20- நாட்டின் ஜனநாயக - மதச்சார்பற்ற கலாச்சாரத்தை சீரழிக்கும் சங்பரிவார் எதிரிகளை அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து எதிர்க்க தயாராக வேண்டும் என கேரள சாகித்ய அகாடமி தலைவர் கே.சச்சிதானந்தன் கூறினார். கேளு சேட்டன் கல்வி மையத்தி னால் ஏற்பாடு செய்யப்பட்ட கிருஷ்ண பிள்ளை நினைவு தேசிய கருத்தரங்கை துவக்கி வைத்து மேலும் அவர் பேசிய தாவது: குஜராத்தில் முதல்வராக இருந்தபோது நடத்தப்பட்ட இனப்படு கொலையை பா.ஜ.க.வும், பிரதமரும் திட்டமிட்டு மீண்டும் நடத்துகிறார்கள். மோடி முதல்வராக இருந்தபோது குஜ ராத்தில் நடந்தது இனப்படுகொலை ஒத்திகைதான்.
அங்கு உருவாக்கப் பட்ட அச்சச் சூழல் தற்போது நாடு முழு வதும் பரவி வருகிறது. பொய்களை உருவாக்கி, அவற்றை உண்மையாக சங்பரிவார் கும்பல்கள் கடத்துகின்ற னர். ஹிட்லர், முசோலினி உள்ளிட்ட பாசிஸ்டுகளுக்கு போட்டியாக இவர்களின் இயக்கங்கள் உள்ளன. மணிப்பூரில் நடந்த வன்முறை களைப் பற்றி பேசும் எதிர்க்கட்சிகள் சதிகாரர்களாகவும் எதிரிகளாகவும் சித்தரிக்கப்படுகின்றன. சிலரை கட்டி வைத்து சித்திரவதை செய்வதன் மூலம் அடையாள எச்சரிக்கை கொடுக்கப்படு கிறது. இன்று நடப்பது மணிப்பூர், ஹரி யானாவில் கும்பல் வன்முறை என்று சொல்லி ஒதுங்கி இருக்க முடியாது. அவர்கள் எந்த நேரத்திலும் எங்கும் வரலாம். அனைவருக்கும் ஒரே எதிரி என்பதை உணர்ந்து கொள்வது முக்கியம். நாடு முழுவதும் நடைபெற்று வரும் மனிதாபிமானமற்ற அரசமைப்பு மைக்கு எதிரான ஜனநாயக விரோத அணுகுமுறைகள் அம்பலப்படுத்தப் பட வேண்டும். வரலாற்றைப் படிப்பதும் கற்பித்தலும் அரசமைப்பு நிறுவனங் களைப் பாதுகாப்பது போன்ற விழிப் புணர்வு முறைகள் மூலம் மட்டுமே ஜனநாயகத்தின் மீது சரியான நம்பிக்கையைப் பாதுகாக்க முடியும். பொதுவான குறைந்தபட்ச அடிப்படையில் எதிரிக்கு எதிரான பரந்த ஒற்றுமை தேவை. எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய ‘இந்தியா’ கூட்டணி ஒரு நம்பிக்கைக்குரிய தொடக்கம். இத்தகைய ஒற்றுமையை வலுப்படுத்த இடதுசாரிகள் முன்வர வேண்டும் என்றார் சச்சிதானந்தன். ஈஸ்ட்ஹில் உடற்கல்வி கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் பி.மோகனன் தலைமை வகித்தார்.