சபரிமலையில் செயற்கையான நெரிசலை உருவாக்க சிலர் முயற்சிப்பதாகவும், அவர்கள் இதற்காக முகாமிட்டுள்ளதாகவும் முன்னாள் மேல்சாந்தி சந்தேகம் தெரிவித்துள்ளார். தரிசனம் முடிந்ததும் அனைவரையும் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து முன்னாள் மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சபரிமலை சன்னிதானத்தில் முகாமிட்டு சிலர் செயற்கையான நெரிசலை ஏற்படுத்த முயற்சிப்பதாக சந்தேகம் எழுகிறது. அப்படிப்பட்டவர்களின் நோக்கம் சபரிமலையில் நெரிசல் இருப்பதாக செய்திகளை உருவாக்குவதுதான். நெரிசல் இப்போது மட்டுமல்ல; இதற்கு முன்னரும் இருந்துள்ளது. மலை ஏறுபவர்களை தரிசனம், நெய் அபிஷேகம் செய்தவுடன் திருப்பி அனுப்ப வேண்டும் என்றார்.
சபரிமலை சென்றடைபவர்களுக்கு எந்த சிரமமும் ஏற்படக்கூடாது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் இதை அரசியல் பிரச்சினையாக பார்க்க வேண்டாம். மாநில அரசு சாலைகளை விரிவுபடுத்தவோ, அதிக நிலத்தை பயன்படுத்தவோ முடியாது. இது வனப்பகுதியால் சூழப்பட்டுள்ள பகுதி. ஒரு அங்குல நிலத்தை கையகப்படுத்தவும் மத்திய அரசின் அனுமதி தேவை.
அங்கே பேருந்து வசதி இல்லை என்று சிலர் சொல்வதைக் கேட்டேன். அப்படியென்றால், அங்கு வந்தவர்கள் எல்லாம் நடந்து வந்தவர்களா என்றும் சங்கரன் நம்பூதிரி கேட்டார். தேவஸ்வம் அமைச்சர் கே.ராதாகிருஷ்ணனிடம் சில ஆலோசனைகள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.