திருவனந்தபுரம், ஜுன் 15- கண்ணூரில் இருந்து திருவனந்த புரம் சென்ற விமானத்தில் நடந்த சம்பவம் முற்றிலும் கண்டிக்கத்தக்கது என முதல்வர் பினராயி விஜயன் கூறி யுள்ளார். விமானத்திற்குள் இளை ஞர் காங்கிரஸ் தொண்டர்கள் வன் முறையில் ஈடுபட்டதை நியாயப் படுத்த காங்கிரஸ் மேலிடமே களம் இறங்கியது. சம்பவத்தின் பின்னணி யில் உள்ள திட்டமிடலை நிரூபிக்கும் எதிர்வினை இது எனவும் அவர் தெரிவித்தார். தனக்கு எதிராக நடந்த தாக்குதல் முயற்சி குறித்து அவர் மேலும் கூறு கையில், கடந்த சில காலமாக யுடிஎப் தலைமையில் தேவையற்றதும் கல வர நோக்கத்துடனும் நடத்தப்படும் போராட்டங்களின் தொடர்ச்சி. இதை ஜனநாயகத்திற்கும் மக்களுக்கும் விடுக்கப்பட்ட சவாலாகவே பார்க்க முடியும். நாடு முழுவதும் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்களின் குறிக்கோள். இதற்கு பாஜகவின் ஆதரவும் உள்ளது. அரசையும், ஒட்டுமொத்த மக்க ளையும் நேசிப்பவர்களைத் தூண்டி விடுவதற்கான நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுபோன்ற வன்முறை மற்றும் அராஜகச் செயல்களுக்கு எதிராக ஜன நாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்க வும், எதிர்க்கட்சிகளின் வலையில் சிக்காமல் கவனமாக இருக்கவும் முதல்வர் பினராயி விஜயன் வேண்டு கோள் விடுத்துள்ளார்.
விமானத்தில் நடத்திய பயங்கரவாதம்: இ.பி.ஜெயராஜன் கருத்து
விமானத்திற்குள் இருந்த இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களை பயங்கரவாதிகள் என எல்டிஎப் அமைப்பாளர் இ.பி.ஜெயராஜன் கூறி யுள்ளார். முதலமைச்சரை தாக்கு வதே அவர்களின் ஒரே நோக்கமாக இருந்தது. பயணிகள் அனைவரும் திகைத்து நின்றனர். அவரை தாழ்வாரத்தில் நிறுத்தாமல் இருந்தி ருந்தால், அவர்கள் தாக்கியிருப்பார் கள். இதற்கு வி.டி.சதீசன் பதில் சொல்ல வேண்டும். அவர்தான் வன் முறையாளர்களை ஊக்கப்படுத்தி னார் என்று ஜெயராஜன் குற்றம் சாட்டினார். மேலும் அவர் கூறுகையில், ‘கண்ணூரில் இருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். விமானம் திருவனந்தபுரத்தில் தரை யிறங்கியது. அனைவரும் வெளி யேறத் தயாரானதும், இரண்டு மூன்று பேர் முதலமைச்சரைத் தாக்கும் நோக்கில் அவருக்கு எதிராகக் கோஷம் எழுப்பினர். இதுதான் இளைஞர் காங்கிரஸ். நீங்கள் தீவிரவாதத்தில் ஈடுபட்டுள் ்ளீர்களா? இங்கு தீவிரவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அந்த விமா னத்தில் நாங்கள் யாரும் இல்லாதி ருந்தால் முதல்வரை தாக்கியிருக்க மாட்டார்களா?.. இது மிகவும் ஆட்சேபணைக்குரியது என்றார்.