திருவனந்தபுரம், ஜுன் 10- கன்னியாகுமரி வன விலங்கு சரணாலயத்திற்குள் நுழைந்த அரிக்கொம்பனிட மிருந்து ரேடியோ காலர் செய்தி வந்துள்ளதாக தமிழக வனத்துறை தெரிவித்துள் ளது. வெள்ளியன்று (ஜுன் 9) இரவு கன்னியாகுமரி வன விலங்கு சரணாலயத்திற்குள் அரிக்கொம்பன் நுழைந்துள்ளது. சுமார் 20 கிலோ மீட்டர் பயணம் செய்து கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயத்தை வந்தடைந்தது அரிக்கொம்பன். தொடர்ந்து கண்காணிப்புப் பணியை மேற்கொள்ள வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். அப்பர் கோதையார் முத்துக்குழி வனப்பகுதியில் அரிக்கொம்பனை வனத்துறையினர் அண்மையில் திறந்துவிட்டனர். இதனிடையே கன்னியாகுமரி பழங்குடியின மக்கள் அரிக்கொம்பனுக்கு எதி ராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.