states

img

கேரள அரசின் வீடற்றவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்திற்கு நிலம் கொடுத்த அடூர் கோபாலகிருஷ்ணன்

கேரளத்தின் புகழ்பெற்ற இயக்குநரான அடூர் கோபாலகிருஷ்ணன் கேரள அரசின் வீடற்றவர்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டத்திற்கு தனக்குச் சொந்தமான நிலத்தை இலவசமாக அளிக்க முன்வந்துள்ளார்.

சுவயம்வரம், எலி பத்தாயம், நாலு பெண்ணுகள் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி 16 தேசிய விருதுகள், 18 கேரள மாநில விருதுகள், 2004-ஆம் ஆண்டில் தாதா சாகேப் பால்கே போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார் அடூர் கோபாலகிருஷ்ணன்.

தற்போது, கேரளத்தின் அரசின் வீடற்றவர்களுக்கு வீடு கட்டித்தரும் தன் ஊரான ஆடூரில் உள்ள 13 சென்ட் நிலத்தை இலவசமாக வழங்குவதாக மாநில உள்துறை அமைச்சர் கோவிந்தனிடம் அடூர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனின் இச்செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.