states

img

பிரபல மலையாள நடிகர் கோட்டயம் பிரதீப் காலமானார்  

பிரபல மலையாள நடிகர் கோட்டயம் பிரதீப் மாரடைப்பால் இன்று காலமானார்.  

பிரபல மலையாள நடிகர் கோட்டயம் பிரதீப் மாரடைப்பால் கொச்சியில் இன்று காலமானார். அவருக்கு வயது 61.  2001 ஆம் ஆண்டு தனது 40வது வயதில் ஐ.வி. சசி இயக்கிய ‘ஈ நாடு இன்னலே வரே’ படத்தின் மூலம் திரையுலகின் அறிமுகமான கோட்டயம் பிரதீப் பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.    

2010 ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைதொடந்து ராஜா ராணி, நண்பேன்டா, தெறி உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.    

2016 ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான ஏசியாநெட் காமெடி விருது இவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை நடிகர் கோட்டயம் பிரதீப் மாரடைப்பால் காலமானார்.  

அவரது மறைவு கேரள திரையுலகத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது மறைவுக்கு கேரள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.