states

img

ஆதிவாசி மக்களின் வறுமையைப் போக்கி வாழ்வில் ஒளியேற்றிய பினராயி அரசு

பாலக்காடு, ஏப். 24- கேரளாவில் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை 200 நாட்களாக மாற்றி ஆதிவாசி மக்க ளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து வறு மையை கணிசமாகக் குறைத்த பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜன நாயக முன்னணி அரசுக்கு பெரும் வர வேற்பு உள்ளதை கண்கூடாக காண முடிந்தது என்கிறார் ஏ.லாசர்.

18ஆவது மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல்  26 அன்று நடைபெறுகிறது. இரண்டாம் கட்டத்தில் கேரளத்தின் 20  தொகுதி களுக்கும் வாக்குப் பதிவு நடைபெறு கிறது. இதையொட்டி புதனன்று பிரச்சாரம் நிறைவு பெற்றுள்ளது. 

கேரளத்தில் 20 தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலை மையிலான இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர்களுக்கு மக்களின் வரவேற்பு அமோகமாக உள்ளது என்பதை பிரச்சாரக் களத்தில் பங்கேற்ற தலைவர்களும் லட்சக்கணக்கான இடதுசாரி தொண்டர்களும் உறுதி செய்கின்றனர்.

குறிப்பாக, பினராயி விஜயன் தலை மையிலான இடதுஜனநாயக முன்னணி அரசின் செயல்பாடுகள் இந்தத் தேர்தல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதை பிரச்சாரக் களத்தில் உணர முடிந்துள்ளது. நாடு  முழுவதும் எழுந்துள்ள பாஜக - மோடி  எதிர்ப்பு அலை இத்தேர்தலில் முக்கியத் தாக்கம் செலுத்துகிறது என்ற போதிலும் கேரளாவில் அரசின் திட்டங்களும் அதை செயல்படுத்தியுள்ள பாங்கும் ஏழை, எளிய உழைப்பாளி மக்கள் மீதான பினராயி அரசின் பேரன்பும் கேரள தேர்தல் களத்தில் நிச்சயம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இடதுஜனநாயக முன்னணி தலை வர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

இந்தப் பின்னணியில், தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று தேர்தல் முடிந்ததை அடுத்து பாலக் காடு, இடுக்கி போன்ற தமிழக எல்லை யோர மாவட்டங்களில் உள்ள தமிழ் மக்களிடையே இடதுஜனநாயக முன் னணி வேட்பாளர்களுக்கு ஆதர வாக தமிழ்நாட்டைச் சேர்ந்த இடது சாரித் தலைவர்கள் பிரச்சாரம் மேற் கொண்டனர். 

குறிப்பாக, பாலக்காடு நாடாளு மன்றத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக்குழு உறுப்பினரும், அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கத்தின் தலைவருமான ஏ.விஜய ராகவனுக்கு ஆதரவாக, பாலக்காடு தொகுதிக்கு உட்பட்ட மன்னார்காடு சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் தமிழ் மக்களிடையே மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மூத்த தலைவரும் விவ சாயத் தொழிலாளர் சங்க அகில இந்தி யத் துணைத் தலைவருமான ஏ.லாசர்,  தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினரும், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவரும், கந்தர்வக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினருமான எம்.சின்ன துரை ஆகியோர் பிரச்சாரம் மேற்கொ ண்டனர். இத்தொகுதிக்குட்பட்ட பல் வேறு கிராமங்களில் நேரடியாக மக்களைச் சந்தித்து விஜயராகவ னுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்புப் பணியில் ஈடுபட்டனர். ஆதிவாசி மக்கள்  நிறைந்துள்ள அட்டப்பாடி பகுதியிலும் பல்வேறு கூட்டங்களில் பங்கேற்றனர். இப்பகுதி முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி யின் வேட்பாளருக்கு மக்கள் பேரா தரவு அளித்து வருவதை காண முடிந்தது என ஏ.லாசர் குறிப்பிட்டார்.

“குறிப்பாக, பினராயி விஜயன் தலைமையிலான இடதுமுன்னணி அரசு  கேரளம் முழுவதும் மகாத்மா காந்தி  கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தை மிகச்சிறப்பான முறையில் அமலாக்கி வருகிறது. ஒன்றிய பாஜக அரசு கடுமை யான முறையில் கேரள அரசுக்கு நிதி யை வெட்டினாலும் தனது சொந்த நிதி யிலிருந்து இத்திட்டத்தை வெற்றிகர மாக செயல்படுத்தி வருகிறது. இன்னும் குறிப்பாக மாநிலம் முழுவதும் வசிக்கும் ஆதிவாசி மக்களுக்கு இத்திட்டத் தின் கீழ் நூறுநாள் வேலை என்பதை 200 நாட்களாக அதிகரித்து மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது பின ராயி அரசு. 200 நாட்களும் சட்டக்கூலி யான ரூ.333, அனைத்து ஆதிவாசி மக்க ளுக்கும் கிடைப்பதை உறுதி செய் துள்ளது. நூறு நாள் வேலை செய்யும் மற்றவர்களுக்கும் ரூ.333 சட்டக்கூலி உத்தரவாதமாக கிடைக்கப்பெற்று வருகிறது. 

இது ஆதிவாசி மக்களின் சமூக  வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை, நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது என்பதை பார்க்க முடிகிறது. அட்டப்பாடி உள்ளிட்ட பகுதிகளில், வறுமையின் பிடியிலிருந்து நாங்கள் வெளியேறுவதற்கு பினராயி அரசு 200 நாட்களும் வேலை கொடுத்து தின மும் ரூ.333 சட்டக்கூலியை அமலாக்கி யது மிகப்பெரும் உதவியாக அமைந்து ள்ளது என்று பெருமிதத்துடனும் உணர்ச்சிப் பெருக்குடனும் மக்கள் கூறுவதை கேட்க முடிந்தது. அது, மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுஜனநாயக முன்னணி அரசு எந்த அளவிற்கு அடிமட்டத்தில் உள்ள வறிய மக்களுக்கு கைகொடுத்திருக் கிறது என்பதை எண்ணி பெருமிதம் கொள்ளச் செய்தது” என்று விவரித்த ஏ.லாசர், ஆதிவாசி மக்களுக்காக கூடுத லாக நூறு நாட்கள் அளிக்கும் வேலை க்கு, மாநில அரசே தனது சொந்த நிதி ஆதாரத்தை உருவாக்கி கூலி கிடை ப்பதை உத்தரவாதம் செய்திருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

அதுமட்டுமல்ல, ஆதிவாசி மக்கள் உட்பட வீடற்ற ஏழை, எளிய மக்கள்  வீடு கட்ட கேரள அரசு ஒவ்வொரு வீட்டி ற்கும் ரூ.6லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை அமலாக்கியிருக்கிறது. மேலும், பழுதடைந்த வீடுகளை மராமத்து செய்வதற்காக ரூ.2லட்சம் அரசு தருகிறது. இதுபோன்ற ஏராள மான திட்டங்கள் கிராமப்புற ஏழை, எளிய தலித் மற்றும் பழங்குடி மக்களை நேரடியாக சென்றடைவது உத்த ரவாதம் செய்யப்பட்டிருப்பதை பிரச்சார பணியின்போது பார்க்க முடிந்தது என்கிறார் ஏ.லாசர்.

இத்தகைய திட்டங்களும் முறையான அமலாக்கமும் பினராயி அரசின் மீது பெரும் நம்பிக்கையையும் பற்றையும் ஏற்படுத்தியுள்ளது. இது நிச்சயம் தேர்தலில் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கலாம் எனக் குறிப்பிடுகிறார் அவர்.

எம்.சின்னதுரை எம்எல்ஏ 
பாலக்காடு தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஏ.விஜயராகவனின் பிரச் சாரப் பயணத்தில் கந்தர்வக் கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னதுரை பங்கேற்றார். தமிழக - கேரள எல்லையான பாலக்காடு மாவட்டத்தின் வாளையாரில் விஜய ராகவனை எம்.சின்னதுரை தலைமை யில் வரவேற்றனர்.  அதைத் தொடர்ந்து வாளையார், பூலாம்பாறை, சுள்ளிமடை, உம்மினிகுளம், கன்னி யோடு உள்ளிட்ட பகுதிகளில் விஜயராக வனுக்கு வாக்கு சேகரித்து எம்.சின்ன துரை எம்எல்ஏ தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். இலைப்புள்ளி பஞ்சாயத்தில் பெரும் எண்ணிக்கை யிலான மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சின்னதுரை பங்கேற்ற பிரச்சாரங்களில் சுபாஷ் சந்திர போஸ்,  என்.என்.கிருஷ்ணதாஸ், கே.ஆர்.சுரேஷ்குமார், பி.சி.விசு, எம்.சுந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இடுக்கி

இடுக்கி மாவட்டத்தில் தமிழர்கள் பெருவாரியாக வசிக்கும் குமுளி, வண்டிப்பெரியார், பீர்மேடு உள்ளிட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க  மாநிலச் செயலாளருமான எஸ்.கே.பொன்னுத்தாய், இடது ஜனநாயக முன்னணியின் வேட்பாளரான ஜோய்ஸ் ஜார்ஜ்க்கு ஆதரவாக பிரச்சா ரம் மற்றும் வாக்கு சேகரிப்பு பணி களில் ஈடுபட்டார்.