திருச்சூர், பிப்.15- திருச்சூர் மாவட்டம் சாலக்குடி அருகில் உள்ள தும்பூர்முழி பகுதியில் தும்பிக்கை இல்லா குட்டி யானை தென்பட்டது.
இரண்டு யானைகளின் பாதுகாப்பில் குட்டி யானை சாலையைக் கடந்ததை சிலர் படம் பிடித்துள்ளனர். கடந்த சில நாட்களாக அதிரப்பள்ளி பகுதியில் தும்பிக்கை இல்லாத இந்த குட்டி யானையின் நடமாட்டம் காணப்படுகின்றது.
தும்பிக்கை இல்லாமல் பிறந்ததா அல்லது வன விலங்குகளின் தாக்குதலில் தும்பிக்கை துண்டிக்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.