திருவனந்தபுரம், பிப்.19- கேரள பல்கலைக் ழகத்தின் கீழ் உள்ள 67 கல்லூரிகளில் 64 இல் வெற்றி பெற்று இந்திய மாணவர் சங்கம் வரலாற்று சாதனை படைத்துள்ளது, இதுபோல் கண்ணூர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 71 இல் 60 கல்லூரிகளில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. கேரள பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் கேஎஸ்யு, ஏபிவிபி, கேம்பஸ் பிரண்ட் கூட்டணியால் பரப்பப்பட்ட பொய்களுக்கு மாணவர்கள் கடுமையாக பதிலடி கொடுத்தனர். வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், 10 கல்லூரி களில் போட்டியின்றி எஸ்எப்ஐ வெற்றி பெற்றது. 28 கல்லூரிகளில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது. கடந்த முறை கேஎஸ்யு யூனியனாக இருந்த நகரூர் ஸ்ரீ சங்கர வித்யாபீடம் உதவி பெறும் கல்லூரி மற்றும் பெரிங்கம்மாளா இக்பால் கல்லூரிகளில் அனைத்து இடங்க ளிலும் வெற்றி பெற்று மீண்டும் எஸ்எப்ஐ வசம் வந்தது. ஏபிவிபி மற்றும் கேம்பஸ் ப்ரண்ட் அமைப்புகள் இம்மாவட்டத்தில் போட்டியிட்டாலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. கல்விக்கான மாண வர்களின் உரிமைப் போராட்டத்திலும், வகுப்புவாதத்தை எதிர்த்த போராட்டத்திலும் தலைமை வகித்த எஸ்எப்ஐக்கு பரிசாக இந்த வெற்றி கிடைத்துள்ளது. கேரள பல்கலைக்கழகத் தேர்தலில் எஸ்எப்ஐ-க்கு அமோக வெற்றியைப் பெற்றுத் தந்த அனைத்து மாவட்ட மாண வர்களுக்கும் மாவட்டத் தலைவர் ஏ.ஆர்.ராகுல், செயலாளர் ஜே.ஜே.அபிஜித் ஆகி யோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.
கண்ணூர் பல்கலை'
கண்ணூர் பல்கலை கழகத்துக்கு உட்பட்ட காசர்கோடு, கண்ணூர், வயநாடு மாவட்டங்களில் கண்ணூர் பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தேர்தலில் 71 கல்லூரிகளில் 60இல் எஸ்எப்ஐ வெற்றி பெற்றுள்ளது. 78 பல்கலைக்கழக யூனி யன் கவுன்சிலர் பதவி இடங்களையும் எஸ்எப்ஐ பிடித்துள்ளது. மாங்காட்டுப் பரம்பு, மானந்தவாடி, பையனூர் சுவாமி ஆந்ததீர்த்த, நீலேஸ்வரம் பி.கே.ராஜன் நினைவு கல்லூரி என நான்கு வளா கங்களில் போட்டியின்றி எஸ்எப்ஐ மாண வர் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். எம்எஸ்எப் மாணவர் அமைப்பு வகுப்புவாத துருப்புச்சீட்டை பயன்படுத்திய காசர்கோடு அரசு கல்லூரியில் அனைத்து 18 மேஜர் இடங்களையும், 13 மைனர் இடங்களை யும் எஸ்எப்ஐ வென்றது. கேஎஸ்யு கோட்டை யாக இருந்த காசர்கோடு நெட்டானிகே பஜ மாதிரி கல்லூரியில், எஸ்எப்ஐ எட்டு மேஜர் இடங்களில் ஏழும், ஏழு மைனர் இடங்களில் ஐந்தும் வெற்றி பெற்றது.