states

img

மது கொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகள்

கேரளா மாநிலம் அட்டப்பாடியில் மனநலம் பாதிக்கப்பட்ட 30 வயதான  மது என்பவர் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
 2018 ஆம் ஆண்டு கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே முக்காலியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை அரிசி திருடியதாக கூறி ஒரு கும்பல் அடித்து கொலை செய்தது.
மதுவின் கைகளைக் கட்டி, முகத்தில் ரத்த காயத்துடன் அவர் கண்ணீர் விட்டு அழுதவாறு இருந்தார். அப்போது, அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மதுவுடன் செல்பி எடுத்து இணையத்தில் பரப்பினர். அதன்பின் போலீசார் வந்து மதுவை அழைத்துச் செல்லும் வழியிலே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
 2018 ஆம் ஆண்டு 16 பேர் குற்றவாளிகளாக கருதப்பாட்டனர் இதுவரை 129 பேரிடம் விசாரணை நடத்தியதில் 10 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.