states

img

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை உயிரிழப்பு!

குஜராத் மாநிலத்தில் 50 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் அமரேலி மாவட்டத்தில் உள்ள சுரக்புரா கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் மூடப்படாமல் இருந்த சுமார் 50 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் நேற்று மாலை விவசாயக் கூலித் தொழிலாளியின் ஒன்றரை வயது குழந்தை எதிர்பாராத விதமாக தவறி விழுந்தது.
குழந்தையின் அழுகுரலை கேட்ட சிலர், உடனடியாக தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த தீயணைப்புத் துறையினர், மீட்பு பணியை தொடங்கினர். இதை தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டு அவர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
17 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு அதிகாலை 5 மணி அளவில் குழந்தை மயக்க நிலையில் மீட்கப்பட்டது. மருத்துவமனையில் கொண்டுசெல்லப்பட்ட நிலையில், குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.