states

img

கிருஷ்ணருக்கு உலகிலேயே மிக உயரமான சிலை!

அகமதாபாத், டிச.24- இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலுக்கு, குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் 182 மீட்டர் (597 அடி) உயரத்திற்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. ‘ஒற்றுமையின் சிலை’ என்ற பெயரிலான இந்த சிலை, உலகின் மிக உயரமான சிலை யாக கருதப்படுகிறது. ரூ.2 ஆயிரத்து 989 கோடி  ரூபாயைக் கொட்டி இந்த சிலையை பாஜக அரசு எழுப்பியது. குஜராத்தில் நிறுவப்பட்ட படேலின் சிலை யைத் தொடர்ந்து, பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களிலும் இதேபோல ராமருக்கு சிலை,  சிவனுக்கு சிலை, அனுமனுக்கு சிலை, சத்ரபதி சிவாஜிக்கு சிலை என்று வரிசையாக சிலை நிறு வப்பட்டு வருகின்றன. இதற்காக மக்களின் வரிப்பணத்திலிருந்து பல ஆயிரம் கோடி  ரூபாய் வாரி இறைக்கப்பட்டுக் கொண்டிருக் கின்றன. கடைசியாக, சனாதன வைதீக மதத்தை, நாட்டில் நிலை நிறுத்தியவர்களில் ஒருவரான ஆதிசங்கரருக்கு ம.பி. மாநிலம் காந்தவா மாவட்டம், ஓம்காரேஸ்வ ரில் 108 அடி உய ரத்தில் சிலை அமைக்கும் பணிகள் துவங்கின. ரூ.2 ஆயிரம் கோடி செலவில் இந்த சிலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில்தான், மகாபாரதம் என்ற மாபெரும் இதிகாச கதையில் வரும் ஸ்ரீகிருஷ் ணர் வாழ்ந்ததாக கருதப்படும் குஜராத் மாநி லம் துவாரகையில் உலகிலேயே மிக உயரமான கிருஷ்ணர் சிலை அமைக்க திட்டமிட்டுள்ளது. காந்தி நகரில் நடைபெற்ற குஜராத் அமைச்ச ரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்  பட்டுள்ளதாக மாநில அரசின் செய்தித் தொடர் பாளரும், சுகாதாரத் துறை அமைச்சருமான ரிஷிகேஷ் படேல் தெரிவித்துள்ளார். “‘தேவபூமி துவாரகை வழித்தடம்’ திட்  டத்தை மேம்படுத்த பாஜக அரசு தீா்மானித் துள்ளது. இதன் முதல் பகுதி திட்டப் பணிகள் அடுத்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், கட லுக்குள் மூழ்கிவிட்டதாக கூறப்படும் துவா ரகை நகரின் எஞ்சிய பகுதிகளை மக்கள் கண்டு களிக்கும் வகையில் பார்வையாளர் காட்சிக்  கூடம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன.  இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, உலகி லேயே மிக உயரமான கிருஷ்ணர் சிலை அமைக்கப்பட உள்ளது. அதுபோல, காட்சிக் கூடத்தில் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் துவாரகை நகரம் மூழ்கும் அனுபவத்தை அளிக்கும் மண்டலம், பகவத் கீதை அனு பவ மண்டலம் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளன” என்று ரிஷிகேஷ் படேல் கூறி யுள்ளார்.