states

img

ஓட்டம் பிடிக்கும் வேட்பாளர்கள்

மக்களவைத் தேர்தலுக்காக பாஜக  2 கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த 2 கட்ட வேட்பாளர் பட்டி யலில் சீட் வழங்க வில்லை என பல சிட்டிங் எம்பிக்கள் கட்சியை விட்டு ஓட்டம் பிடித்தனர். சீட் வழங்கியும் பல  முக்கிய எம்பிக்க ளும் மக்களின் மன நிலையை உணர்ந்து பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என விலகி வருகின்றனர். இதுவரை 10க்கும் மேற்பட்டோர் இவ்வாறு ஒதுங்கி யுள்ள நிலையில், குஜராத் மாநிலத்தில் 2 வேட்பாளர்கள் ஒரே நாளில் அடுத்த டுத்து வெளியேறியுள்ளனர்.

பிரதமர் மோடியின் சொந்த மாநில மான குஜராத்தின் வதோதரா தொகுதி  பாஜக பெண் எம்பியான  ரஞ்சன்பென் தனஞ்ஜெய பட்டிற்கு வரவிருக்கும் மக்க ளவைத் தேர்தலில் போட்டியிட பாஜக மீண்  டும் சீட் வழங்கியது. உட்கட்சி பிரச்சனை  காரணமாக  சனியன்று தேர்தலில் போட்டி யிட விரும்பவில்லை எனக் கூறி ரஞ்சன்  பட் விலகியுள்ளார். வதோதராவில் கட்சி யை கடந்து ரஞ்சன் பட்டிற்கு தனிச்செல்  வாக்கு உள்ள நிலையில், அவர் தேர்த லில் போட்டியிட விரும்பவில்லை என ஒதுங்கி இருப்பது பாஜகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் ஒரு வேட்பாளர்
இதே போல குஜராத்தின் சபர்கந்தா  தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக கப்பட்ட பிகாஜி தாகூர் என்பவரும் தான்  போட்டியிட விரும்பவில்லை என சனி யன்று அறிவித்தார். இதற்கான காரணங்  களை அவர் கூற விரும்பவில்லை. பாஜக  வலுவாக உள்ள மாநிலமான குஜராத்தி லேயே வேட்பாளர்கள் தொடர்ந்து விலகு வது அக்கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.