states

பொய்களின் தலைவர் மோடி

அகமதாபாத், நவ.28-  பிரதமர் மோடி பொய்களின் தலைவர்  என்றும், அவர் மக்களைக் கொள்ளை யடித்து விட்டார் என்றும் காங்கிரஸ் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சாடியுள்ளார். குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டம் தெடிப்பாடாவில் நடைபெற்ற காங்கிரஸ் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது, அவர் கூறியிருப்பதாவது: “தான் ஒரு ஏழை என்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி சொல்லிக்கொள்கிறார். ஆனால், நான் ஏழைகளுக்கெல்லாம் ஏழை.  நான் கார்கே. தீண்டத்தகாத சமுதாயத்தில் இருந்து வந்தவன். நீங்கள் (மோடி) கொடுக் கும் தேநீரை மக்கள் அருந்தவாவது செய் வார்கள். ஆனால், நான் கொடுத்தால் யாருமே வாங்க மாட்டார்கள்.  மக்களின் அனுதாபத்தை நீங்கள் (மோடி)  பெறுவதற்கு மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. அவர்கள் புத்திசாலிகள். நீங்கள் முதல் பொய்யை சொன்னால் மக்கள் கேட்  பார்கள். நீங்கள் இரண்டாவது பொய்யை சொன்னாலும் மக்கள் கேட்பார்கள். ஆனால்,  எத்தனை முறைதான் நீங்கள் பொய்களுக்கு மேல் பொய்களாக சொல்வீர்கள்? பிரதமர்  நரேந்திர மோடி பொய்களின் தலைவர். காங்  கிரஸ் நாட்டைக் கொள்ளையடித்து விட்ட தாக பிரதமர் நரேந்திர மோடி கூறி வரு கிறார். ஆனால், மோடிதான் மக்களை கொள்  ளையடித்து விட்டார். பழங்குடியின மக்களின் காடுகளை, நிலங்களை, நீர்நிலைகளை அழித்து விட்டார்.” இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே பேசியுள்ளார்.

;