குஜராத் போர்பந்தர் அருகே ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களைப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர்.
குஜராத்தின் போர்பந்தர் அருகே போதைப்பொருள் கடத்தப்படுவதாக கடலோர காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் கடற்படை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, குஜராத் காவல்துறை ஆகியவை இணைந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கைப்பற்றினர். குஜராத் கடற்பகுதியிலிருந்து போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 6 பாகிஸ்தானியர்களை கைது செய்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்
இதுவரை கடலோர காவல்துறையினர் ரூ.3.135 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கடந்த 30 நாட்களில் இரண்டாவது முறையாகக் குஜராத் கடற்கரையில் , போதைப்பொருட்களைக் கடத்த முயன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.