“மசூதிகளில் ஒலிபரப்பப்படும் 10 நிமிட தொழுகையால் ஒலி மாசு ஏற்படுகிறது என்றால், அதிகாலை 3 மணிக்கு கோயில்களில் ஒலிபரப்பப்படும் பாடல்கள் மற்றும் பஜனைகளை என்னவென்று சொல்லுவீர்கள்?” என்று குஜராத் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மசூதிகளில் நடக்கும் தொழுகையை ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்புவதற்கு தடை கோரி பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த சக்திசின் சாலா என்பவர் குஜராத் உயர்நீதிமன்றம் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், “மசூதிகளில் ஒலிபரப்பப்படும் 10 நிமிட தொழுகையால் ஒலி மாசு ஏற்படுகிறது என்றால், அதிகாலை 3 மணிக்கு கோயில்களில் ஒலிபரப்பப்படும் பாடல்கள் மற்றும் பஜனைகளை என்னவென்று சொல்லுவீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இந்த மனுவை பொதுநல வழக்காக ஏற்க மறுப்பு தெரிவித்த உயர்நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தவிட்டது.