குஜராத்தில் பிரபல தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலம் பஞ்ச்ஹால்ஸ் ரஞ்சித் நகரில் அமைந்துள்ள பிரபல தனியார் தொழிற்சாலையில் இன்று காலை திடீரென மர்ம பொருள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிடம் முழுவதும தீ பரவியதை அடுத்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பணியாளர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதனைதொடர்ந்து தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.