அலகாபாத், ஆக. 3 - வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் தொல்லியல் துறை அதி காரிகள் ஆய்வைத் தொடர அலகாபாத் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாட மசூதி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கியான்வாபி மசூதி வளாகத்தில் தொல்லியல்துறை ஆய்வு நடத்துவ தற்கு ஜூலை 26 வரை உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. வார ணாசி நீதிமன்றம் அளித்த அனுமதியின் அடிப்படையில், கியான் வாபி மசூதியில் திங்களன்று காலை ஆய்வுகள் துவங்கிய நிலையில், இதற்கு எதிராக மசூதி நிர்வாகம் தொடுத்த வழக்கை விசார ணைக்கு ஏற்று, உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி யில் காசி விஸ்வநாதர் கோயிலையொட்டி, கியான்வாபி மசூதி உள்ளது. இந்த மசூதி யின் சுவரில் அமைந்துள்ள சிங்காரகவுரி அம்மனை வழிபடுவதற்கு அனுமதி கோரி, கடந்த 2021- இல் 5 இந்துப் பெண்கள் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதி மன்றம், கியான்வாபி மசூதியில் கள ஆய்வு நடத்த உத்தரவிட்டது.
இதன்படி மசூதியில் ஆய்வு நடத்தப் பட்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மசூதியின் ஒசுகானாவின் நடுவே இருக்கும் நீரூற்று போன்ற அமைப்பை சிவலிங்கம் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த அறிக்கையின் அடிப்படையில், கியான்வாபி மசூதியில் இந்திய தொல்லி யல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என்று 4 இந்துப் பெண்களும் மற்றொரு மனுவைத் தாக்கல் செய்தனர். “ஆதி விஸ்வேஸ்வ ரரின் கோயில் மீது கியான்வாபி மசூதி கட்டப்பட்டு உள்ளது. இதை உறுதி செய்ய கியான் வாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும்” என்று அவர்கள் கூறினர். வாரணாசி மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.கே. விஸ்வேஷாவும் அதனை ஏற்றுக்கொண்டு, “கியான்வாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை அறிவியல்பூர்வமான கள ஆய்வை நடத்தி ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று ஜூலை 21 அன்று உத்தரவிட்டார். மேலும், “ஒசு கானா பகுதியில் மட்டும் ஆய்வு நடத்தக் கூடாது. ஆய்வின்போது மசூதிக்கு எவ்வித சேதமும் ஏற்படக்கூடாது. ஆய்வின்போது தொழுகை நடத்தலாம்” என்றும் நீதிபதி தெரிவித்தார். இதனிடையே, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக கூறி, மசூதி நிர்வாகம் உச்ச நீதிமன்றம் சென்ற நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் தலைமையிலான அமர்வு, மேல்முறை யீட்டுக்கு அவகாசம் வழங்கி, தொல்லி யல் ஆய்வுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இதையடுத்து மசூதி நிர்வாகம், தொல்லியல் ஆய்வுக்கு எதிராக அலகா பாத் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. விசாரணையின்போது, இந்த கட்டடம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்றும், ஆய்வின் போது கட்டடத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டு இடிந்து விழ வாய்ப்புள்ளதாகவும் மசூதி நிர்வாகம் வாதிட்டது. மேலும், இங்கு நடக்கும் தொல்லியல் ஆய்வு என்பது சட்டங்களை மீறுவதாக இருக்கும் என மசூதி தரப்பில் வாதிட்டது. இருப்பினும், இதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்ட நீதிபதி, மசூதி நிர்வாகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்தும், தொல்லியல் ஆய்வுக்கு அனுமதியளித்தும் உத்தரவிட்டார். இதையடுத்து, இந்து பெண்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், “இந்த உத்தரவு உடனடி யாக அமலுக்கு வரும். நாளையே இந்த ஆய்வு தொடங்கப்படும்” என்று அறி வித்துள்ளார். எனினும், உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, மசூதி நிர்வாகம் உச்சநீதிமன்றத்தை நாடும் வாய்ப்பு உள்ளதாக முஸ்லிம் தலைவர் காலீத் ரஷீத் பிராங்கி மஹாளி தெரிவித்துள்ளார்.