சூரத், ஜூன் 29- குஜராத் மாநிலம் ரூ.118 கோடி செல வில் கட்டப்பட்ட பாலம் வெறும் 40 நாட்க ளில் விரிசல் அடைந்தது. பாஜக ஆளும் குஜராத் மாநிலம் சூரத்தில் தாபி ஆற்றின் நடுவே ரூ.118 கோடி செலவில் புதிதாக “வேத்-வரி யாவ்” என்ற பெயரில் பாலம் கட்டப் பட்டது. 40 நாட்களுக்கு முன் அம்மாநில பாஜக முதல்வர் பூபேந்திர படேல் திறந்து வைத்தார். இந்த பாலம் வரி யாவ் மற்றும் வேத் கிராமங்களை இணைப்பது மட்டுமல்லாமல் 8 லட்சம் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு முக் கிய பாதையாக உள்ள நிலையில், திடீ ரென வியாழனன்று பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனால் “வேத்-வரியாவ்” பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட் டது. ரூ.118 கோடி ரூபாய் பிரம்மாண்ட செலவில் கட்டப்பட்ட பாலம் 40 நாட் கள் கூட தாங்காமல் விரிசலுக்கு உள் ளான நிலையில், மோடியின் “குஜராத் மாடல்” ஸ்டைல் மீண்டும் விமர்சனத் துக்கு உள்ளாகியுள்ளது.