states

img

காலியாகிறது ஆம் ஆத்மி

தில்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்  களை போல குஜராத் மாநிலத்தி லும் செல்வாக்கை பெறும் முனைப்  பில் கடந்த 2022 இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்த லில் களமிறங்கி யது அரவிந்த் கெஜ்ரி  வாலின்ஆம் ஆத்மி கட்சி. எதிர்க்  கட்சிகளின் வாக்கு களை பிரித்து  பாஜகவின் வெற்றிக்கு உதவிய ஆம்  ஆத்மி 5 இடங்களில் மட்டுமே வென்றது.  இந் நிலையில் ஷாவதார் தொகுதியில் வென்ற  ஆம் ஆத்மி எம்எல்ஏ பூபேந்திர பயானி  தனது எம்எல்ஏ பதவியையும், கட்சி பதவி யையும் ராஜினாமா செய்து பாஜகவில்  இணையவுள்ளதாக தகவல் தெரிவித் துள்ளார். 

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த  பின் பூபேந்திர பயானி செய்தியாளர்களி டம்,”அரவிந்த் கெஜ்ரிவால் தலைமை யிலான ஆம் ஆத்மி கட்சியில் ஆம் ஆத்மி  மக்களுக்கு சேவை செய்ய சரியான தளம்  இல்லை” எனக் கூறினார். ஏற்கெனவே கடந்த ஆண்டு ஆம் ஆத்மியின் முக்கிய  தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில், மக்களவைத் தேர்த லுக்கு முன்பாக குஜராத்தில் ஆம் ஆத்மி  காலியாகும் நிலையை எட்டியுள்ளது.