பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறிமியின் கருக்கலைப்பு வழக்கில் மனுஸ்மிருதியை மேற்கொள்காட்டி குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, கருக்கலைப்புக்கு அனுமதி கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சமிர் தாவே, கருக்கலைப்பு தொடர்பாக முடிவு எடுக்கும் முன் சிறுமி மற்றும் அவரது வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம் குறித்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று ராஜ்கோட் மருத்துவமனைக்கு உத்தரவிட்டார்.
மருத்துவ நிபுணர்கள் குழு வரும் 15-ஆம் தேதிக்குள், இதுகுறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி, அந்த அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என கூறியுள்ளார்.
இந்த உத்தரவின்போது நீதிபது சமிர் தாவே கூறியதாவது, சமஸ்கிருதத்தில் உள்ள சட்ட புத்தகமான மனுஸ்மிருதியில் 14-12 வயதில் பெண்களுக்கு திருமணம் நடப்பதும், 17 வயதுக்குள் தாயாவதும் வழக்கமானதுதான் என அதில் கூறப்பட்டுள்ளது.அதை நீங்கள் படியுங்கள். தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியம் நன்றாக இல்லாவிட்டால் மட்டுமே கருக்கலைப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கும்.இருவரும் ஆரோக்கியமாக இருப்பது தெரியவந்தால் அனுமதி வழங்கப்பட மாட்டாது.ஒருவேளை கருக்கலைப்புக்கு நீதிமன்றம் அனுமதி வழங்காவிட்டால் என்ன செய்வது என்பது குறித்து அரசு சார்பில் காப்பகம் உள்ளதா என்று விசாரித்து அதில் சேர்ப்பதா என்பது குறித்து முடிவெடுங்கள் என நீதிபதி தெரிவித்தார்.
இந்தியாவின் அரசியலமைப்பு சட்டப்படி தீர்ப்பு வழங்காமல், மனுஸ்மிருதியை மேற்கோள்காட்டி பேசியிருக்கும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி சமிர் தாவேவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.