குஜராத்தின் தாஹோத் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் இரும்பு கேட் விழுந்ததில் 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
குஜராத்தின் தாஹோத் மாவட்டத்தின் ராம்புரா கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியின் இரும்பு கேட், அஷ்மிதா மோகனியா எனும் 8 வயது சிறுமி மீது விழுந்தது. இந்த விபத்தில் சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை அடுத்து, அவர் தாஹோதில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 20-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு, பின்னர் அகமதாபாத் பொது மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். இந்த நிலையில், அஷ்மிதா கடந்த 23-ஆம் தேதியன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து, அப்பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மயூர் பரேக் தெரிவித்தார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.