குஜராத், டிச.3- 182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தி ருந்தது. அதன்படி முதல் கட்டமாக 89 தொகுதிகளில் டிசம்பர் 1 அன்று வாக்குப்பதிவு நடந்தது. இதில் மொத்தம் 63.75 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தது. 2 ஆம் கட்டமாக திங்களன்று (டிச.5) மீதமுள்ள 93 தொகுதி களுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. அகமதாபாத், வதோதரா, காந்திநகர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் உள்ள சட்டப் பேரவை தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 833 பேர் களத்தில் உள்ளனர். இந்த தொகுதிகளில் ஞாயிற்றுக் கிழமை(டிச.4) மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதையடுத்து, அந்த தொகுதி களில் தங்கி உள்ள வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் வெளி யேற உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பிறகு தேர்தல் நடைபெற உள்ள வாக்குச் சாவடிகளுக்கு வாக்கு எந்திரங்கள் மற்றும் தேர்த லுக்கு பயன்படுத்தப்படும் அழியா மை உள்ளிட்ட பொருட்கள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படுகிறது. பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் போலீஸ் மற்றும் துணை ராணு வத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வருகிற 8 ஆம் தேதி (வியாழக்கிழமை) ஏற்கனவே நடந்து முடிந்த இமாசலப்பிரதேசம் மற்றும் குஜராத் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. அன்று பிற்பகல் இந்த 2 மாநிலத்திலும் யார்? ஆட்சியை பிடிப்பார்கள் என்பது தெரியவரும்.