states

img

குஜராத் மூடநம்பிக்கையால் பறிபோன 24 நாள் குழந்தையின் உயிர்

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஜெட்பூரில் உள்ள சர்தார்  பூர் கிராமத்தில் வல்சோயா என்ற  இளம்பெண்ணுக்குப் பிறந்த ஆண்  குழந்தை சுவாச நோயால் பாதிக்கப்பட்டி ருந்தது. மூச்சுவிட முடியாமல் குழந்தை தொடர்ந்து அழுதது. இதனால் வல் சோயா, மத்தியப்பிரதேசத்தில் உள்ள தனது தாய் புவாவிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அதற்கு புவா குழந்தை  அழுகாமல் இருக்க தூபக் குச்சிகளை  (பத்திக் குச்சி) ஏற்றி வழிபடச் சொல்லி யுள்ளார். இதன்படி குழந்தையை மருத்து வமனைக்கு அழைத்துச் செல்லாமல் வல்  சோயா தூபக் குச்சிகளை (பத்திகளை) குழந்தையின் உடல் மேல் வைத்து வழி பாடு நடத்தியுள்ளார். அதனால் குழந்தை யின் உடல் நிலை மோசமடைந்தது. இந்  நிலையில், ஒருவாரத்திற்கு பிறகு அக்.13  அன்று குடும்பத்தினர் குழந்தையை மருத்  துவ சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். குழந்தை யின் வயிற்றில் தீ காயத்தை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்து, தீக் காயங்களுக்கு பத்தியால் சுடப்பட்டதே காரணம் என்று கூறினர். ஆனால் அந்த குழந்தையின் பெற்றோர் ஏற்கவில்லை.  மாறாக சடங்கின் போது ஏற்பட்ட விபத்து  தான் இதற்குக் காரணம் என்று சமா ளித்தனர்.  இறுதியில் பெற்றோர்கள் பத்திக்  குச்சிகளை உடல் மேல் வைத்து வழிபாடு நடத்தியதை ஒத்துக்கொண்டனர். இந்  நிலையில், ஒரு வார சிகிச்சை பலனின்றி  குழந்தை வெள்ளியன்று நள்ளிரவு  இறந்தது. பெற்ற குழந்தையை மூடநம்  பிக்கையால் தாய் இழந்த சம்பவம்  குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.