states

கணவரின் ஆதார் தரவுகளை மனைவி அணுக முடியாது

கணவரின் ஆதார் தரவுகளை மனைவி அணுக முடியாது என  கர்நாடக உயர் நீதிமன்றம் எனக் குறிப்பிட்டுள்ளது.

நவம்பர் 2005-ல் திருமணம் நடந்த நிலையில் , இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. உறவில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, கர்நாடகாவைச் சேர்ந்த அப்பெண் சட்டபூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளார்.

குடும்ப நீதிமன்றம் அவருக்குப் பராமரிப்புத் தொகையாக 10,000 ரூபாய் மற்றும் அவர்களின் மகளுக்குக் கூடுதலாக 5,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளது.

பிரிந்து வாழும் தன் கணவரின் இருப்பிடம் தெரியாததாலும், அவர் தப்பி ஓடியதாலும் குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி, அவரின் ஆதார் தரவுகளைக் கோரி இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்தை (UIDAI) அணுகி உள்ளார்.

ஆனால் ஆதார் சட்டத்தின் 33-ஆவது பிரிவின் கீழ் பிப்ரவரி 25, 2021 அன்று அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பின்னர் தன் கணவரின் ஆதார் எண், பதிவு விவரங்கள் மற்றும் தொலைப்பேசி எண் ஆகிய தரவுகளைக் கோரி சிங்கிள் பெஞ்சை நாடியுள்ளார்.

பிப்ரவரி 8, 2023 அன்று அந்தப் பெண்ணுக்குச் சாதகமான முடிவு கிடைத்தது.

அப்பெண்ணின் நிலையைக் கருத்தில் கொண்டு கணவருக்கு நோட்டீஸ் அனுப்பும்படி UIDAI-க்கு சிங்கிள் பெஞ்ச் உத்தரவிட்டது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனைவியின் விண்ணப்பத்தைக் கணவரிடம் கேட்டு மறுபரிசீலனை செய்யுமாறு அறிவுறுத்தியது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.சுனில் தத் யாதவ் மற்றும் விஜயகுமார் ஏ பாட்டீல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

தனிநபர் உரிமை குறித்துப் பேசிய நீதிமன்றம், திருமணமானது ஆதார் அட்டைதாரரின் தனியுரிமைக்கான உரிமையைக் குறைக்காது.

இது சட்டத்தின் கட்டமைப்பிற்குள் சுயாட்சி மற்றும் தனியுரிமைகளின் பாதுகாப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

கணவரின் ஆதார் தரவை திருமண உறவின் அடிப்படையில் மட்டுமே ஒரு பெண் ஒருதலைபட்சமாக அணுக முடியாது’’ என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.