நாட்டின் முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவகவுடா வுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். முன்னாள் அமைச்சரான மூத்த மகன் ரேவண்ணா ஹொலேநரசிப்புரா தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். முன்னாள் முதல்வரான இளைய மகன் குமாரசாமி ஜேடிஎஸ் செயல் தலைவராகவும், சென்னப்பட்டணம் தொகுதி எம்எல்ஏவாகவும் உள்ளார்.
இந்நிலையில், ரேவண்ணாவின் மனைவி பவானி தனது காரில் உடுப்பி மாவட்டம் சாலிகிராமத்துக்கு பெங்க ளூருவில் இருந்து சென்று கொண்டி ருந்தார். செல்லும் வழியில் பவானி யின், டொயோட்டா கார் மீது இருசக்க ரத்தில் வந்த வாலிபர் ஒருவர் லேசாக மோதினார். இதனால் காரில் முன்பக் கத்தில் கீறல் ஏற்பட்டது.
இதையடுத்து காரில் இருந்து இறங்கிய பவானி இருசக்கர வாக னத்தில் வந்தவரை நோக்கி ‘’நீ சாக வேண்டும் என்றால் பேருந்தில் விழுந்து சாக வேண்டியது தானே. இந்த காரின் மதிப்பு ரூ.1.50 கோடி. இந்த காரை வாங்கியதில் இருந்து சிறு கீறல் கூடபடவில்லை. உன்னால் ஏற்பட்ட விபத்தால் காரை சரிசெய்ய ரூ.50 லட்சம் செலவாகும். இதனை தருவாயா?’’ என வாய்க்கு வந்தபடி திட்டினார். பவானி மேலும் தகாத வார்த்தைகளால் பேசினாலும் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் எதுவும் பேசாமலேயே இருந்தார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், “சாலை என்றால் விபத்து நடக்கத்தான் செய்யும். முன்னாள் பிர தமர், முன்னாள் முதல்வர் குடும்பத் தின் மருமகள் இப்படி சாமானியரை பேசுவது தவறு”, “லேசான கீறலுக்கு ரூ.50 லட்சம் எப்படி ஆகும்? அரசி யல்வாதி என்றால் பொய் பேசுவீர் களா?” என பல்வேறு கருத்துக்களு டன் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். முக்கியமாக பாஜக வுடன் கூட்டணி அமைத்தால் அனைத் தும் மாறும் என ஜேடிஎஸ் கட்சியை டேக் செய்து விமர்சனங்களால் நெட்டி சன்கள் பந்தாடி வருகின்றனர்.