கர்நாடகாவில் 50 அடி பள்ளத்தில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்த விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு சந்திர திருகோணமலை பகுதியில் தத்தா பீடம் பாபாபுடங்கிரி அமைந்துள்ளது. இந்த நிலையில் இன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த தனியார் பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பை உடைத்து கொண்டு 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப்படையினர் மற்றும் போலீசார், பேருந்தில் சிக்கியிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் 4 வயது குழந்தை உட்பட 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் இந்த பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.