states

img

கர்நாடக அரசுப் பள்ளி மாணவிகள் 20 பேர் மருத்துவமனையில் அனுமதி

கர்நாடகாவில் ஆர்.எம்.எஸ்.ஏ அரசுப் பள்ளியில் சுகாதாரமற்ற உணவை உண்ட 20க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தின் கொப்பால் மாவட்டம் ஆலவாடியில் ராஷ்ட்ரிய மத்தியமிக் சிக்ஷா அபியான் (RMSA) அரசுப் பள்ளி உள்ளது. பள்ளியின் விடுதியில் நேற்று வழங்கப்பட்ட சுகாதாரமற்ற உணவை உண்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று காலை உணவு உண்ட பிறகு மாணவிகளின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இந்த நிலையில், 20க்கும் மேற்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவிகள் சிலர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.