states

img

கடன் விண்ணப்பத்தை நிராகரித்த வங்கிக்கு தீ வைத்த நபர் கைது!

கர்நாடகாவில் கடன் விண்ணப்பத்தை நிராகரித்த வங்கிக்கு தீ வைத்த சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
கர்நாடக மாநிலம் ரட்டிஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வாசிம் ஹசரத்சாப் முல்ல. இவர் ஹெடுகொண்டா கிராமத்தில் உள்ள கனரா வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். இவரது ஆவணங்களை ஆய்வு செய்த வங்கி அலுவலர்கள் வாசிமின் சிபில் ஸ்கோர் குறைவாக இருந்ததால் அவரது விண்ணப்பத்தை நிராகரித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த வாசிம் சனியன்று இரவு வங்கி கிளைக்கு சென்று ஜன்னலை உடைத்து உள்ளே பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதனால் அந்த வழியாகச் சென்ற மக்கள்  புகை மூட்டம் ஏற்பட்டதை கண்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் தீ வைத்தவரையும் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.