பெங்களூரு, ஜூன் 20- கர்நாடக மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற விடாமல் பாஜக தடுக்கிறது என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசி யுள்ளார். சமீபத்தில் நிறைவு பெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜகவை தென்னிந்தியாவிலிருந்து துரத்திய நிலையில், தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற அனைத்து ஏற்பாடுகளையும் காங் கிரஸ் அரசு செய்து வருகிறது. இந்நிலையில், கர்நாடக மக்க ளுக்கு அளித்த வாக்குறுதியை நிறை வேற்ற விடாமல் பாஜக தடுக்கிறது என அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர் களிடம் கூறுகையில், “காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மக்களுக்கு 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என வாக்குறுதி அளித்து இருந்தோம். அத னை நிறைவேற்ற இந்திய உணவு கழ கத்திடம் இருந்து அரிசியை வாங்க நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். முத லில் அரிசி வழங்குவதாக ஒப்புதல் அளித்த ஒன்றிய பாஜக அரசு, தற் போது அதனை நிறுத்தி வைத்து அர சியல் செய்து வருகிறது. நாங்கள் மற்ற மாநிலங்களிடமிருந்து அரிசியை கொள்முதல் செய்து வாக்குறுதியை நிறைவேற்றியே தீருவோம்” என்றார்.