states

img

கர்நாடகா: புகார் அளித்த பெண்ணை மிரட்டித் தாக்க முயன்ற பாஜக எம்.எல்.ஏ அரவிந்த் லிம்பாவலி

கர்நாடக மாநிலத்தில் புகார் மனு அளிக்க வந்த பெண் ஒருவரை பாஜக எம்.எல்.ஏ அரவிந்த் லிம்பாவலி மிரட்டல் விடுத்துத் தாக்க முயன்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் உள்ள வர்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த பாஜக எம்.எல்.ஏ அரவிந்த் லிம்பாவலியிடம், பெண் ஒருவர் புகார் மனு அளிப்பதற்காக அவரை அழைத்த போது, அரவிந்த் அவரை தகாத வார்த்தையில் மிரட்டி, தாக்க முயன்றார். மேலும், அப்பெண்ணிடம் இருந்த மனுவை பறித்து, கிழித்தெறிந்தார். அதுமட்டுமின்றி, அப்பெண்ணை கைது செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். அரவிந்த் லிம்பாவலியின் இத்தகைய செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.