பெங்களூரு, மே 19 - கர்நாடக முதல்வராக சித்தராமையா வும், துணை முதல்வராக டி.கே. சிவகுமா ரும் சனிக்கிழமையன்று பதவியேற்றுக் கொள்கின்றனர். பெங்களூரு காண்டிவரா மைதான த்தில் பகல் 12.30 மணிக்கு நடைபெறும் இந்த விழாவில் புதிய அமைச்சர்களும் பதவியேற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கர்நாடகத்தில் காங்கி ரஸ் அமைச்சரவையின் பதவியேற்புக்கு, 7 மாநில முதல்வர்கள், நாடு முழுவது முள்ள பாஜக-வுக்கு எதிரான கட்சிகள் மற்றும் காங்கிரசின் தோழமைக் கட்சித் தலைவர்கள் என பெரும் எண்ணிக்கை யிலான தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் முன் னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், இமாசல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ஆகியோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளனர். தோழமைக் கட்சித் தலைவர்கள் என்ற வகையில்,
திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டா லின், ஐக்கிய ஜனதாதளம் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவரும் ஜார்க்கண்ட் முதல்வரு மான ஹேமந்த் சோரன், ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவரும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி ஆகியோரும் விழாவிற்கு அழைக்கப்பட்டு உள்ளனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் து. ராஜா, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகி லேஷ் ஆகியோருக்கும், விழாவில் பங்கேற்க வருமாறு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வரு மான மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தாலும், அவர் கலந்து கொள்வது மட்டும் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.