பெங்களூரு கெம்பே கவுடா ரயில் நிலையத்தில் உத்யான் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளில் திடீரென தீப்பற்றியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு கெம்பே கவுடா ரயில் நிலையத்தில் மும்பையில் இருந்து இன்று அதிகாலை 5.45 மணிக்கு வந்து உத்யான் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று கொண்டிருந்தது. பயணிகள் அனைவரும் ரயிலில் இருந்து வெளியேறிய நிலையில் காலை 7.10 மணியளவில் பி1 மற்றும் பி2 பெட்டிகளில் திடீரென தீப்பற்றியதால், ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ பற்றியதற்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.