கர்நாடகத்தில் ஏ.சி. வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் விஜயநகர மாவட்டத்தில் மரியம்மனஹள்ளி கிராமத்தில் வெங்கட் பிரசாந்த் (42), அவரது மனைவி, மகன் மற்றும் மகளுடன் ராகவேந்திரா ஷெட்டி என்பவரது வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஏ.சி. வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஏ.சி. வெடித்ததில் வீடு முழுவதும் தீ பரவியதால் வீட்டிலிருந்த 4 பேரும் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். பின்னர் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு ஹோஸபேட்டே அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைதொடந்து ஏ.சி. லிருந்து வாயு கசிந்து, பின்னர் மின் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.