கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
முடா நில ஒதுக்கீடு விவகாரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் வழங்கியதையடுத்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா வழக்குத் தொடர்ந்தார். இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை தொடர்ந்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடத்த உத்தரவிட்ட நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி உட்பட 4 பேர் மீது லோக் ஆயுக்தா போலீசார் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், அவர் மீது சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது.