புதுதில்லி, மே 18- கர்நாடக மாநில முதல்வராக சித்த ராமையாவையும் (75), துணை முதல்வ ராக டி.கே. சிவகுமாரையும் (61) காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இவர்கள் சனிக்கிழமையன்று பெங்க ளூரு காண்டிவரா மைதானத்தில் பகல் 12.30 மணிக்கு நடைபெறும் விழாவில் பதவி யேற்றுக் கொள்வார்கள்; அவர்களுடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்றுக் கொள்வார்கள் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அதிகா ரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 224 இடங்களில் 135 இடங்க ளில் வெற்றிபெற்றது. பாஜக 66, மதச்சார் பற்ற ஜனதாதளம் 19, கல்யாண ராஜ்ய பிரகதி பக்ஷா, சர்வோதயா கர்நாடகா பக்ஷா கட்சிகள் தலா 1, சுயேட்சைகள் 2 என இடங்களைப் பெற்றனர். இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செய லாளர் கே.சி. வேணுகோபால், வியாழ னன்று காலை தில்லியில் செய்தியாளர் களைச் சந்தித்தார். அப்போது, “கர்நாடக முதல்வராக சித்த ராமையாவும், துணை முதல்வராக டி.கே. சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ள னர்” என்ற காங்கிரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். மேலும், “பதவியேற்பு விழா, வரும் சனிக்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு பெங்க ளூருவில் நடைபெறும். அன்றைய நாளில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பார்கள்; பதவி யேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு ஒத்த கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப் பட்டு உள்ளது” என்றும் கே.சி. வேணு கோபால் தெரிவித்தார். சித்தராமையா மற்றும் டி.கே. சிவ குமார் இருவருக்கும் இடையில் சுழற்சி முறையிலான அதிகாரப்பகிர்வு இருக் குமா? என்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “சுழற்சி முறையிலான அதி காரப்பகிர்வு என்பது கர்நாடகா மக்களு டனேயே இருக்கும்” என்றும் கே.சி. வேணு கோபால் பதிலளித்தார்.