states

img

பெங்களூரு குண்டுவெடிப்பு: சந்தேகத்துக்குரிய நபரின் சிசிடிவி காட்சி வெளியீடு

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக சந்தேகத்துக்குரிய நபரின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 
பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில்  நேற்று பிற்பகல் 1 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது. இதில் உணவக பணியாளர்கள் ஃபரூக் ஹூசேன் (26), திவிபான்சூ (25), ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் 2 பேர் உட்பட 7 வாடிக்கையாளர்கள் என மொத்தம் 10 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது. தேசிய பாதுகாப்புப் படையினரும் (NSG) சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில், சந்தேகத்துக்குரிய நபரின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதில், தொப்பி மற்றும் கண்ணாடி அணிந்து கையில் பையுடன் வந்த அந்த சந்தேகத்துக்குரிய நபர், உணவகத்துக்குள் கைப்பையை வைத்துவிட்டு வேகமாக வெளியேறும்   காட்சிகள் பதிவாகியுள்ளதாகத் தெரிகிறது. அந்த நபர் உணவகத்தில் பையை வைத்துவிட்டுச் சென்ற சில நிமிடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
இச்சம்பவம் தொடர்பாக மங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 4 பேரிடம் விசாரணை நடத்து வருவதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.