கர்நாடக மாநிலம் பெலகாவியில் பெலகாவி தாலுகாவில் உள்ளது ஹோசா வண்ட்முரி கிராமம். இந்த கிராமத்தில் நிச்சயதார்த்தம் செய்யவிருந்த இளைஞர் ஒருவர், தான் ஏற்கெனவே காதலித்த அதே ஊரைச் சேர்ந்த சிறு மியுடன் தலைமறை வாகி வேறு இடத்திற் குச் சென்று திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இளைஞரும், சிறுமியும் ஒரே சமூகத்தி னர் என்ற நிலையில், ஞாயிறன்று நள்ளி ரவு சிறுமியின் பெற்றோர் மற்றும் உற வினர்கள், கிராம மக்கள் சிலர் இளை ஞரின் வீட்டை தாக்கி சேதப்படுத்தியது மட்டுமல்லாமல், இளைஞரின் தாயை மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்து, உதைத்து நிர்வாண ஊர்வலம் நடத்தி யுள்ளனர். இந்த ஊர்வலத்தில் கிராம மக்களும் கலந்து கொண்ட அதிர்ச்சி சம்பவமும் அரங்கேறியுள்ளது.
தகவலறிந்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக 7 பேரை கைது செய்து, மேற்கொண்டு அசம்பாவிதம் அரங்கேறாமல் இருக்க ஹோசா வண்ட்முரி கிராமத்தில் போலீசார் குவிக் கப்பட்டுள்ளனர். காதல் விவகாரத்திற் காக ஒரே சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை நிர்வாண ஊர்வலம் நடத்திய சம்பவம் நாடுமுழுவதும் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.