states

img

கர்நாடகாவில் சாக்லேட் சாப்பிட்ட 6 வயது சிறுமி மூச்சுத்திணறி பலி!  

கர்நாடகாவில் சாக்லேட் சாப்பிட்ட 6 வயது சிறுமி மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கர்நாடகத்தின் உடுப்பி மாவட்டம் பைந்தூர் அருகே விவேகானந்தா ஆங்கிலவழி பள்ளியில் சமன்வி என்ற சிறுமி ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி இன்று காலை பள்ளிக்கு செல்ல விரும்பவில்லை என்று கூறியுள்ளதால் சிறுமியின் குடும்பத்தில் பள்ளிக்கு செல்ல வற்புறுத்தியுள்ளார்.

பின்னர், சிறுமியை சமாதானப்படுத்த தாய் சுப்ரிதா புஜாரி, சமன்வியிடம் சாக்லேட் ஒன்றை கொடுத்துள்ளார். அப்போது பள்ளி வேன் வருவதை கண்ட சிறுமி, அவசர அவசரமாக ரேப்பருடன் அவசரமாக சாக்லேட்டை வாயில் திணித்து விழுங்கியுள்ளார்.

சிறிது நேரம் கழித்து, சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு பேருந்து படிக்கட்டில் மயங்கி விழுந்தார். இதைக் கண்ட குடும்பத்தினர் சிறுமியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் சிறுமியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  

பிரேதப் பரிசோதனையின் அறிக்கைக்கு பிறகே மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.