கர்நாடகாவில் 60 வயது முதியவர் வயிற்றிலிருந்து 187 நாணயங்களை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள சந்தே கெல்லூரு கிராமத்தைச் சேர்ந்தவர் திம்மப்பா ஹரிஜன். 60 வயதான இவர் கடந்த சில நாள்களாக வாந்தி மற்றும் வயிறு பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது வயிற்றில் ஏராளமான நாணயங்கள் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பாகல்கோட்டில் உள்ள ஹனகல் ஸ்ரீ குமரேஷ்வர் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஹரிஜன் வயிற்றிலிருந்து மொத்தம் 1.5 கிலோகிராம் எடையுள்ள பல்வேறு மதிப்புள்ள நாணயங்களை அகற்றியுள்ளனர். அதில் ஐந்து ரூபாய் நாணயங்கள் 56, இரண்டு ரூபாய் நாணயங்கள் 51, ஒரு ரூபாய் நாணயங்கள் 80 ஆகியவை இருந்துள்ளது. இதன் மதிப்பு 462 ஆகும்.
கடந்த சில நாள்களாக மனநலம் பாதிக்கப்பட்ட இவர் நாணயங்களை விழுங்கியுள்ளார் எனக் கண்டுபிடிக்கப்பட்டது.