மகப்பேறு விடுப்பு என்பது அடிப்படை உரிமை, விடுப்பு தர மறுப்பது என்பது பெண்களின் கண்ணியத்தின் மீதான தாக்குதல் என்று ஒடிசா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஒடிசா மாநிலம் கியோஞ்சார் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியை சொர்ண லதா, 2013-ஆம் ஆண்டில் 6 மாதங்கள் மகப்பேறு விடுப்பு எடுத்துள்ளார். ஆனால் அவரின் மகப்பேறு விடுப்பு, தொகுதி மானியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு பொருந்தாது எனக் காரணம் கூறி விடுப்பை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணையில் 4 வாரங்களுக்குள் ஆசிரியரின் விடுப்பை அனுமதிக்க பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஒடிசா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மகப்பேறு விடுப்பு என்பது அடிப்படை உரிமை, விடுப்பு தர மறுப்பது என்பது பெண்களின் கண்ணியத்தின் மீதான தாக்குதல் என்று ஒடிசா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.