states

img

தலித் பெண் 31 துண்டுகளாக வெட்டிக்கொலை

ஒடிசா மாநிலம் நகரங்பூர் மாவட்டம் முரு மதிஹி கிராமத்தில் வசித்து வந்த  21 வயதான தலித் பெண் திலாபாய் கடந்த வாரம் புதன்கிழமை முதல் மாயமாகி  விட்டதாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்  அளித்திருந்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், சனியன்று முருமதிஹி வனப்பகுதியில் அடை யாளம் தெரியாத அளவிற்கு 31 துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் திலாபாயின் சடலத்தை  போலீசார் மீட்டனர். 

இந்த கொலை தொடர்பாக அதே பகுதியைச்  சேர்ந்த சந்திரராட், அவரது மனைவி ஷியா ஆகியோரை போலீசார் கைது செய்து விசா ரணை மேற்கொண்டனர். விசாரணையில் திரு மணம் செய்ததை மறைத்து சந்திரராட், திலா பாயுடன் நெருங்கி பழகியுள்ளார். தன்னை ஏமாற்றியது தெரிந்ததும் திலாபாய், சந்திர ராட் வீட்டில் சண்டைபோட்டுள்ளார். இந்த விவ காரத்தில் வனப்பகுதிக்கு கடத்தப்பட்டு திலா பாய் 31 துண்டுகளாக வெட்டிக்கொலை செய்  யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகி யுள்ளது.